ஆப்நகரம்

மீண்டும் ஒரு கிரைம் த்ரில்லரில் சுந்தர் சி.!பூஜையுடன் இனிதே துவங்கியது படப்பிடிப்பு..

'கட்டப்பாவ காணோம்' இயக்குநர் மணி செயோன் இயக்கும் கிரைம் த்ரில்லர் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சுந்தர் சி.

Samayam Tamil 15 Mar 2021, 3:55 pm
2017 ஆம் ஆண்டு சத்யராஜ்,சிபிராஜ் இருவர் நடிப்பில் வெளியான 'கட்டப்பாவ காணோம்' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒரு கிரைம் த்ரில்லர் திரைப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் மணி செயோன்.VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கிறார்.
Samayam Tamil சுந்தர் சி
சுந்தர் சி


'அரண்மனை' , அரண்மனை 2 வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து தற்போது 'அரண்மனை 3' திரைப்படத்தை இயக்கும் வேளைகளில் ஈடுப்பட்டிருக்கிறார் சுந்தர் சி.பேய் படங்களில் மசாலா தூவி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் சுந்தர் சி , ஏற்கனவே வி.இசட் துரை இயக்கத்தில் ஹாரர் திரைப்படமான 'இருட்டு'வில் நடித்திருந்தார்.இப்போது மீண்டும் மணி செயோன் இயக்கம் கிரைம் த்ரில்லர் திரைப்படத்தில் தற்போது நடிக்க இருக்கிறார்.

'கட்டப்பாவ காணோம்' திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் கிட்டத்தட்ட நான்கு வருட இடைவேளைக்கு பிறகு,சுந்தர் சி நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கயிருக்கிறார் மணி செயோன். க்ரைம் டிராமாவாக உருவாகும் இந்த திரைப்படத்தில் ஹெபா படேல், சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இவர்களுடன் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், முருகதாஸ், ராஜ்குமார், அஜித் கோஷி ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

குட்டை பாவாடையில் டக்கராக நிற்கும் ஜெனிலியா.! ஹார்ட்டின்களை பறக்க விடும் ரசிகர்கள்..

மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார் சந்தோஷ் தயாநிதி.இரண்டு இயக்குனர்கள் இணைய உள்ளதால் இப்போதே இந்த திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு கோலிவுட்டில் ஏற்பட துவங்கியுள்ளது.இன்னமும் பெயரிப்படாத, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

சுந்தர் சி யின் மனைவி குஷ்பு காங்கிரஸில் இருந்து பாஜக தாவிய போது , சுந்தர் சியும் பாஜகவில் ஐக்கியமாக போவதாக செய்திகள் வெளியாகின.அதனை பற்றி மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் இருந்தார் சுந்தர் சி.இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் நடிகை குஷ்பு.இதனால் மனைவிக்கு ஆதரவாக சுந்தர் சி பிரச்சாரத்தில் குதிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த சமயத்தில், தற்போது அவரின் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்