ஆப்நகரம்

ஓவியாவுக்காக ‘கலகலப்பு’ இரண்டாம் பாகத்தை எடுக்கிறார் சுந்தர் .சி!

பிக்பாஸ் ஓவியாவுக்காக இயக்குனர் சுந்தர் சி. தற்போது ‘கலகலப்பு’ இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி உள்ளார்.

TNN 24 Aug 2017, 3:53 pm
பிக்பாஸ் ஓவியாவுக்காக இயக்குனர் சுந்தர் சி. தற்போது ‘கலகலப்பு’ இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி உள்ளார்.
Samayam Tamil sundar c will direct kalakalappu part2 for oviya
ஓவியாவுக்காக ‘கலகலப்பு’ இரண்டாம் பாகத்தை எடுக்கிறார் சுந்தர் .சி!


பிக்பாஸ் நிகழ்ச்சியால் நடிகை ஓவியாவுக்கு ஏகப்பட்ட மவுசு கூடியுள்ளது. இந்நிலையில் நடிகை ஓவியாவை வைத்து ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார் இயக்குனர் சுந்தர்.சி.

சுந்தர்.சி இயக்கத்தில், 2012ல் வெளியான படம் ‘கலகலப்பு’. இந்தப் படத்தில் விமல், ‘மிர்ச்சி’ சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் காமெடியாக இருந்ததால், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது சுந்தர் சி. ‘சங்கமித்ரா’ படத்தின் பணிகளில் தீவிரமாக இருக்கிறார். ஹீரோயின் அமையாததால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே போகிறது. இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி. ஒரு சின்ன பட்ஜெட் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். ‘பிக் பாஸ்’ மூலம் ஓவியாவுக்கு ஏகப்பட்ட புகழ் கிடைத்துள்ளதால், அவர் நடித்த ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறார் என்கிறார்கள். அந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட்டையும் அவர் எழுதி முடித்துவிட்டாராம்.

‘மெர்சல்’ படத்திற்கு அதிக செலவழித்திருப்பதால் ‘சங்கமித்ரா’ படத்தை தயாரிப்பதாகச் சொன்ன , ‘ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கும் தற்போது பணச்சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். எனவே, ‘சங்கமித்ரா’வைக் கொஞ்சம் ஒத்தி வைத்துவிட்டு, ‘கலகலப்பு’ இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கிறோம் என்று சொல்லி விட்டார்கள். விரைவில் ஷூட்டிங் தொடங்கலாம் என்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்