ஆப்நகரம்

விஷாலுடன் இணையும் சுந்தர் சி. மற்றும் லைகா!

லைகா தயாரிப்பில், சுந்தர் சி. இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் விஷால்.

Samayam Tamil 7 Jan 2019, 5:14 pm
நடிகராகவும், படத் தயாரிப்பாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார் விஷால்,. விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் ‘இரும்புத்திரை’ மற்றும் ‘சண்டக்கோழி 2’. இந்த இரு படங்களில் ‘இரும்புத்திரை’ விஷாலுக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
Samayam Tamil vishal-sunarr-c


அடுத்ததாக நடிகர் விஷால், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தை பிரபல இயக்குனரான சுந்தர். சி இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது லைகா நிறுவனம் நடிகர் சிம்புவை வைத்து ‘வந்தா ராஜாவாகத்தான் வருவேன்’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை சுந்தர் .சி இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜனவரி இறுதியில் திரைக்கு வருவதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை அடுத்து லைகா தயாரிப்பில், சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள படம் விரைவில் தொடங்கவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்