ஆப்நகரம்

லாக்டவுனில் இயக்குனராக மாறிய குழந்தை நட்சத்திரம் ராசுகுட்டி அஸ்வந்த்

பிரபல குழந்தை நட்சத்திரமான அஸ்வந்த் கொரோனா லாக்டவுனில் கிடைத்த நேரத்தில் இயக்குனராக மாறி உள்ளார். ஒண்டிப்புலி என்கிற கதையை அவர் வீடியோவில் கூறியுள்ளார்.

Samayam Tamil 29 Apr 2020, 5:32 pm
சூப்பர் டீலக்ஸ் படத்தில் ராசுகுட்டி என்ற சுட்டிப் பையனாக நடித்திருந்தவர் அஸ்வந்த். அந்த படத்தில் திருநங்கையாக மாறிய விஜய் சேதுபதிக்கு மகனாக நடித்திருப்பார் அவர். அஸ்வந்த்தின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
Samayam Tamil Ashwanth


இதற்கு முன்பு ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோ மற்றும் டிவி சீரியலில் காமெடியாக நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பாப்புலராக இருந்தார் அஸ்வந்த் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகழ் தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவும் காரணம்.

தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் அஸ்வந்த் தற்போது மற்றவர்களைப் போலவே தனது வீட்டில் தான் இருக்கிறார். இந்த நேரத்தை வீணாகாமல் அவர் இயக்குனராக மாறியுள்ளார். ஒண்டிப்புலி என்கிற கதையை எழுதி அதற்கு தானே குரல் கொடுத்து தன்னிடம் இருக்கும் பொம்மைகளை வைத்து கதையை சொல்கிறார்.

தற்போது வரை இரண்டு எபிசோடுகள் தனது யூடியூபி சேனலில் வெளியிட்டுள்ளார் அவர். "ஒரு அழகான காட்டில் அமைதியாக வாழும் மிருகங்களை இரண்டு புலிகள் சேர்ந்து வேட்டையாடி வந்தன, ஒரு கட்டத்தில் இரண்டுபுலிகளில் ஒரு புலி தாங்கள் செய்யும் செயல் தவறு என்று நினைத்து திருந்தி வாழ நினைத்தது, கோபமடைந்த மற்றொரு புலியிடமிருந்து மீண்டதா இந்த காடு என்பதே இந்த கதை" என சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார் அஸ்வந்த்.


இது மட்டுமின்றி தான் வீட்டில் செய்யும் மற்ற விஷயங்கள் பலவற்றையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் அவர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்