ஆப்நகரம்

லண்டனில் ரஜினியின் மகள், மருமகனுக்கு டூப்ளிகேட் பாஸ்போர்ட்!

லண்டனுக்கு சுற்றுலா சென்ற ரஜினிகாந்தின் மகள், மருமகனின் பாஸ்போர்ட் திருடு போனதைத் தொடர்ந்து அவர்களுக்கு உடனடியாக டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Sep 2019, 8:40 pm
ரஜினிகாந்தின் 2ஆவது மகள் சவுந்தர்யாவுக்கும், கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தைத் தொடர்ந்து இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தன. அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இருவரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
Samayam Tamil Vishagan Soundarya Rajinikanth


இதே போன்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுந்தர்யாவும், விசாகனும் லண்டனுக்கு சுற்றுலா செய்து முடிவு செய்திருந்தனர். அதற்காக, சென்னையிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் லண்டன் செல்ல பிசினஸ் கிளாஸ் வகுப்பில் டிக்கெட் முன்பதிவும் செய்தனர். அதன்படி, இருவரும் லண்டனுக்கு சென்றனர். அங்கு, ஹீப்ரு விமான நிலையத்தை அடைந்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மகாமுனி திரைவிமர்சனம்!

ஆம், எமிரேட்ஸ் விமான சேவை மையத்தில், தனது பையை விசாகன் தேடியபோது, பாஸ்போர்ட் அடங்கிய பையை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும், விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். விசாகன் வைத்திருந்த பையில், பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க டாலரும் இருந்துள்ளது. அதன் மதிப்பு பல லட்சம் என்று கூறப்படுகிறது.

செல்போனை தொலைத்து திண்டாடும் யோகி பாபு: ஜாம்பி புரோமோ வீடியோ!

இந்த நிலையில், விசாகன் மற்றும் சவுந்தர்யா இருவரும் ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். இது குறித்து இந்திய தூதரகத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் தூதரக அதிகாரிகளுக்கு விமான நிலையத்தில் சிக்கியிருந்தது, ரஜினியின் மகள் மற்றும் மருமகன் என்று தெரியவந்துள்ளது.

பிகில் இசை, டீசர் எப்போது? இதோ வெறித்தனமா வந்த அப்டேட்!

உடனடியாக அவர்களுக்கு டூப்ளிகேட் பாஸ்போர்ட் எடுக்கப்பட்ட பின்னர், இருவருமே அங்கிருந்து வெளியில் வந்தனர். இந்த நிலையில், ரஜினியும், தனது மகள் விமான நிலையத்தில் சிக்கியது குறித்து அறிந்து தனது நண்பர்கள் மூலம் உதவி கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாகனின் புகாரைத் தொடர்ந்து அவரது கைப்பையை திருடியவர் குறித்து சிசிடிவி கேமரா மூலம் லண்டன் போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்