தமிழ் சினிமா சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் ரஜினி. 40 ஆண்டுகளை கடந்தும் சினிமாவில் வசூலைக் குவிக்கும் ஹீரோவாக விளங்குகிறார். தற்போதும் தமிழ்நாட்டில் அவரது படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. அவர் படங்களை தயாரிக்க தயாரிப்பளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். இந்நிலையில்ரஜினியின் அடுத்த படத்தை தான் தயாரிக்கப் போவதாக கலைப்புலி எஸ் தாணு தெரிவித்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டை படத்திற்கு பிறகு தற்போது இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயந்தாரா ஜோடியாக நடிக்க யோகிபாபு, நிவேதா தாமஸ்,சுனில் ஷெட்டி ஆகியோரும் நடித்து வருகிறார்கள். மும்பையை மையமாக கோண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.ரஜினியின் அடுத்த படம் பற்றி தற்போது வரை அதிகாரப்பூர்வமான தகவலகள் எதுவும் வரவில்லை.
இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், மற்றும் தற்போது நேர்கொண்ட பார்வை இயக்கியிருக்கும் எச்.வினோத் ஆகியோர் ரஜினிக்கு கதை சொல்லியுள்ளார்கள் . இவர்களில் ஒருவரின் படத்தில் ரஜினி அடுத்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் நான் தான் என கலைப்ப்புலி தானு கூறி வருகிறார். ரஜினியுடன் தாணு நெருங்கிய நட்பில் உள்ளவர். ரஜினியின் கபாலி திரைப்படத்தைத் தயாரித்தார், காலா திரைப்படத்தை வெளியிட்டார். லிங்கா படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனைகளை தாணூ தான் தீர்த்து வைத்தார். இதனால் ரஜினியின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
அதன் காரணமாகவே ரஜினி தன் அடுத்த படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை கலைப்புலி தாணுவுக்குக் கொடுத்திருக்கிறார் என்று தாணுவே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்.ஆனால் ரஜினி இதுவரையிலும் தன் அடுத்த படம் பற்றி எந்த முடிவுகளும் எடுக்க வில்லையாம். ஆனால் தான் தயாரிப்பாளர் என செய்திகள் பரப்புவதன் மூலம் மற்ற தயாரிப்பாளர்கள் ரஜினியை அணுக மாட்டார்கள் என கலைப்புலி கணக்கு போட்டு வருகிறாராம்.
சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டை படத்திற்கு பிறகு தற்போது இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயந்தாரா ஜோடியாக நடிக்க யோகிபாபு, நிவேதா தாமஸ்,சுனில் ஷெட்டி ஆகியோரும் நடித்து வருகிறார்கள். மும்பையை மையமாக கோண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.ரஜினியின் அடுத்த படம் பற்றி தற்போது வரை அதிகாரப்பூர்வமான தகவலகள் எதுவும் வரவில்லை.
இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், மற்றும் தற்போது நேர்கொண்ட பார்வை இயக்கியிருக்கும் எச்.வினோத் ஆகியோர் ரஜினிக்கு கதை சொல்லியுள்ளார்கள் . இவர்களில் ஒருவரின் படத்தில் ரஜினி அடுத்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் நான் தான் என கலைப்ப்புலி தானு கூறி வருகிறார். ரஜினியுடன் தாணு நெருங்கிய நட்பில் உள்ளவர். ரஜினியின் கபாலி திரைப்படத்தைத் தயாரித்தார், காலா திரைப்படத்தை வெளியிட்டார். லிங்கா படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனைகளை தாணூ தான் தீர்த்து வைத்தார். இதனால் ரஜினியின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
அதன் காரணமாகவே ரஜினி தன் அடுத்த படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை கலைப்புலி தாணுவுக்குக் கொடுத்திருக்கிறார் என்று தாணுவே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்.ஆனால் ரஜினி இதுவரையிலும் தன் அடுத்த படம் பற்றி எந்த முடிவுகளும் எடுக்க வில்லையாம். ஆனால் தான் தயாரிப்பாளர் என செய்திகள் பரப்புவதன் மூலம் மற்ற தயாரிப்பாளர்கள் ரஜினியை அணுக மாட்டார்கள் என கலைப்புலி கணக்கு போட்டு வருகிறாராம்.