ஆப்நகரம்

பாலியல் கொடுமை, கொலைவெறி தாக்குதல்: மாமானார் மீது ‘அண்ணாத்த’ பட நடிகை திடுக் புகார்.!

பாலியல் கொடுமை கொடுத்து கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக துணை நடிகை ஒருவர் மாமானார் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 5 Jul 2022, 7:28 pm
சென்னை அடுத்த மாங்காடு அருகே கெருகம்பாக்கம் பாலகிருஷ்ணண் நகர் பகுதியை வசித்து வருபவர் பிரபல துணை நடிகை. இவர் சினிமாவில் துணை நடிகையாகவும் சீரியல்களில் இவர் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். இவர் தனது மாமானார் மீது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
Samayam Tamil Sexul Harassment
Sexul Harassment


இந்த துணை நடிகைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு சுரேஷ்குமார் என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த துணை நடிகை "நான் நடிகையாக இருப்பதால் என் மாமனார் சரவணவேல், மாமியார் சாந்தி ஆகியோர் என்னை மதிப்பதில்லை.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பல முறை என் மாமனார் நீ நடிகை தானே என கேட்டு என் மீது உடல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். இது குறித்து காவல் துறையினரிடம் பல முறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததில்லை, இதற்கு காரணம் என் மாமியாரின் நெருங்கிய உறவினர் காவல்துறையில் மிக உயரிய பதவியில் இருப்பது தான்.

சில தினங்களுக்கு முன்பு கூட என் மாமனார் என்னை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நான் அவரை தடுத்ததால் பெரிய மர கட்டையை கொண்டு என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார். இதனால் பலத்த காயம் அடைந்த நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன்.

Vijay Sethupathi: கமல், விஜய்யை தூக்கி சாப்பிட்ட சேதுண்ணா: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

இது தொடர்பாக மாங்காடு காவல் நிலையத்தில் துணை நடிகை அளித்துள்ள புகாரில் மாமனார் மற்றும் மாமியாரை விசாரிக்க முயன்ற போது அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். மேலும புகார் அளித்துள்ள துணை நடிகை ரஜினியின் அண்ணாத்த, எதற்க்கும் துணிந்தவன், சிவகுமார் சபதம், நட்பே துணை, தேவராட்டம், துப்பறிவாளன், சீரியலில் பேரன்பு உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்