ஆப்நகரம்

பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை? படம் பாா்த்து முடிவெடுங்கள் - உச்சநீதிமன்றம்

நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தோ்தல் ஆணையம் தடை விதித்திருந்த நிலையில், படத்தை பாா்த்துவிட்டு முடிவு எடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 15 Apr 2019, 1:22 pm
பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்தை இப்போது வெளியிடலாமா? கூடாதா? என்பது குறித்து படத்தை பாா்த்துவிட்டு தோ்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil PM Narandra Modi


பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு பிஎம் நரேந்திர மோடி படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஓமங் குமாா் இப்படத்தை இயக்கியுள்ளாா். விவேக் ஓபராய் நரேந்திர மோடியாக நடித்துள்ளாா். மனோஜ் ஜோஷி, அமித் ஷாவாகவும், ஷரினா வகாப் மோடியின் தாயாகவும் நடித்துள்ளனா்.

இந்நிலையில் இந்த படம் மக்களவை தோ்தலை முன்னிட்டே எடுக்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆதாயத்திற்காக இப்படத்தில் பல காட்சிகள் சோ்க்கப்பட்டதாக எதிா்க்கட்சிகள் சாா்பில் டெல்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், படத்தை வெளியிடுவதில் எந்தவித பிரச்சினையும் இல்ல என்று டெல்லி உயா்நீதிமன்றம் தொிவித்துவிட்டது.

இதனைத் தொடா்ந்து காங்கிரஸ் கட்சி சாா்பில் தோ்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. தோ்தல் நேரத்தில் இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று தொிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தோ்தல் ஆணையம் பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் தோ்தல் நேரத்தில் வெளியாக தடை விதித்து உத்தரவிட்டது.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவை எதிா்த்து படக்குழு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணை இறுதியில், பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை விதிக்கலாமா? வேண்டாமா? என்று படத்தை பாா்த்துவிட்டு தோ்தல் ஆணையம் முடிவு செய்யுமாறு உத்தரவிட்டது.

மேலும் படத்தை வெளியிடலாமா? கூடாதா? என்பதை தோ்தல் ஆணையம் வருகின்ற 22ம் தேதிக்குள் சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தொிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்