ஆப்நகரம்

“திருமணத்திற்கு பிறகு நிச்சயமாக நடிப்பை தொடர்வேன்” : நடிகை பாவனா!

“திருமணத்திற்கு பிறகு நிச்சயமாக நடிப்பை தொடர்வேன்” : நடிகை பாவனா!

TOI Contributor 10 Mar 2017, 7:10 pm
மலையாள நடிகை பாவனாவுக்கும், கன்னட திரைப்படத்துறையை சேர்ந்த தயாரிப்பாளர் நவீனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. எளிமையாக நடந்த இந்த நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய உறவினர்களும், பாவனாவின் நெருங்கிய தோழியான மஞ்சு வாரியரும் கலந்து கொண்டனர். கன்னடத்தில் “ரோமியோ” எனும் படத்தில் நடிக்கும் போது பாவனாவுக்கும், நவீனுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அப்போதே திருமணம் செய்து கொள்ள இருவரும் திட்டமிட்டுருந்த நிலையில் பாவனாவின் தந்தை காலமானதால் திருமணம் தள்ளிப்போனது.
Samayam Tamil surely i will continue my acting career after my marriage says actress bhavana
“திருமணத்திற்கு பிறகு நிச்சயமாக நடிப்பை தொடர்வேன்” : நடிகை பாவனா!


இந்த ஆண்டு இறுதியில் பாவனா, நவீன் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்கு பிறகு பாவனா பெங்களூருவில் குடியேற உள்ளார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் பாவனா தற்போது நடித்துவருகிறார். மலையாளத்தில் மூன்று படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் பாவனா நடித்து வருகிறார். மேலும் திருமணத்திற்கு பிறகு நிச்சயமாக நடிப்பை தொடருவேன் என்றும் பாவனா உறுதியாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்