ஆப்நகரம்

வீட்டை விட்டு வெளியே வருபவர்களை போலீஸ் அடிப்பதில் தப்பே இல்லை: தல 'ரீல்' அண்ணன்

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களை போலீசார் திட்டி, அடிப்பதில் தவறே இல்லை என்று நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Mar 2020, 1:24 pm
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களை போலீசார் திட்டி, அடிப்பதில் தவறே இல்லை என்று நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil suresh gopi supports police lathicharging corona lockdown violators
வீட்டை விட்டு வெளியே வருபவர்களை போலீஸ் அடிப்பதில் தப்பே இல்லை: தல 'ரீல்' அண்ணன்


சுரேஷ் கோபி

பிரபல நடிகர் சுரேஷ் கோபிக்கு நான்கு பிள்ளைகள். அதில் இளைய மகன் லண்டனில் இருந்து ஊர் திரும்பியுள்ளார். அவர் வந்த விமானத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள நபர் பயணம் செய்துள்ளார். இதையடுத்து ஊர் திரும்பிய மகனை தனி பிளாட்டில் தங்க வைத்துள்ளார் சுரேஷ் கோபி. தன் கார் டிரைவர் மூலம் மகனுக்கு சாப்பாடு கொடுத்து அனுப்புகிறார்.

மகன்

டிரைவர் தினமும் ஸ்கூட்டரில் சென்று சாப்பாடு கொடுக்கிறாராம். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தன் மகன் வீடு திரும்புவார் என்றும், அதன் பின்னர் அந்த ஸ்கூட்டரை பயன்படுத்தப் போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார் சுரேஷ் கோபி. இளைய மகனுக்கு துணையாக மூத்த மகன் மற்றும் உதவியாளர் பால் ஆகியோரை அந்த பிளாட்டில் தங்க வைத்துள்ளார் சுரேஷ் கோபி.

போலீஸ்

சுரேஷ் கோபி மேலும் கூறியதாவது, படங்கள், கோடீஸ்வரனுக்காக நான் வாரத்தில் இரண்டு முறை டெல்லிக்கு விமானத்தில் செல்வேன். திடீர் என்று ஒரு நாள் அனைத்தையும் விட்டுவிட்டு வீட்டில் இருக்க முடிவு செய்தேன். என்னால் முடியும் என்றால் அனைவராலும் முடியும் என்று நினைக்கிறேன். ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே வரும் மக்களை காயப்படுத்தாமல் அடிப்பதிலோ அல்லது திட்டிவதிலோ தவறு இல்லை. அடித்தால் தான் திருந்துவார்கள் என்று இருக்கும்போது போலீசாரை குறை சொல்ல முடியாது. போலீசாருக்கு முதல்வர் பல கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது. போலீசார் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முயன்று கொண்டிருக்கிறார்கள் என்றார்.

அதிருப்தி

வீட்டை விட்டு வெளியே வருபவர்களை போலீசார் அடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. லேசாக அடிப்பதற்கும், படுகாயம் ஏற்படும் அளவுக்கு தாக்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. இது போன்ற நேரத்தில் போலீசார் பொதுமக்களை காயப்படுத்துவதை ஏற்க முடியாது என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சுரேஷ் கோபி போலீசார் அடிப்பதை நியாயப்படுத்தி பேசியுள்ளது ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்