ஆப்நகரம்

கொண்டாடி மகிழ்வதை விட்டுவிட்டு வழக்கா?: சிம்புவின் 'மாநாடு' பட தயாரிப்பாளர் வேதனை!

சிம்புவின் 'மாநாடு' படத்தின் சாட்டிலைட் உரிமை விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Samayam Tamil 13 Dec 2021, 1:00 pm
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. கடந்த பொங்கலுக்கு சிம்பு நடிப்பில் வெளியான 'ஈஸ்வரன்' படத்திற்கு பிறகு நீண்ட காலமாக இந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருந்தனர் ரசிகர்கள். கடந்த நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
Samayam Tamil Silambarasan - Suresh Kamatchi
Silambarasan - Suresh Kamatchi


'மாநாடு' படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் 'மாநாடு' படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை விற்காமல் இருந்ததால் டி.ராஜேந்தரை ரூ.5 கோடி பொறுப்பேற்றுக் கொண்டு, படம் ரூ.5 கோடிக்கு குறைவாக விற்றால் அதற்கான தொகையையும் டி.ராஜேந்தரே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையுடன் பைனான்சியர் உத்தம் சந்த் கடிதம் எழுதி அதில் டி.ராஜேந்தரின் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

'வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசர் படைத்த சாதனை: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
அதன் பிறகே மறுநாள் படம் வெளியாகியுள்ளது. படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் டி.ராஜேந்தரிடம் தெரிவிக்காமலேயே பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு விற்க முற்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், 'வெற்றிக் கிரீடத்தை மக்களும், உழைப்பும் இணைந்து தலை சூடியிருக்கிறது... கொண்டாடி மகிழ்வதை விட்டுவிட்டு வழக்கா??? நல்லதே வெல்லட்டும். நன்றி இறைவா....' என பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்