ஆப்நகரம்

மீண்டும் மாநாடு பற்றி பரவும் வதந்தி! கொந்தளிப்பில் தயாரிப்பாளர்

மாநாடு படம் ட்ராப் ஆகிவிட்டது என பொய்யான செய்திகள் பரப்பப்படுவது பற்றி சுரேஷ் காமாட்சி கோபமாக பேசி இருக்கிறார்.

Samayam Tamil 6 Aug 2020, 2:14 pm
சிம்புவின் மாநாடு படம் அறிவிக்கப் பட்டு நீண்ட தாமதத்திற்கு பிறகு தான் ஷூட்டிங் துவங்கியது. படப்பிடிப்பு துவங்கும் முன்பு பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுக்கிறார் என தயாரிப்பாளர் புகார் கூறி இருந்த நிலையில், அதற்கு பிறகு சிம்பு மாநாடு படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்று கூட அறிவிப்பு வெளிவந்தது. இருப்பினும் ஒரு வழியாக தயாரிப்பாளர் மற்றும் சிம்பு தரப்பு ஒருவழியாக சமரசமாகி மாநாடு படத்தை துவங்க ஒப்புக்கொண்டனர்.
Samayam Tamil Maanaadu


சென்னையில் இந்த வருட துவக்கத்தில் தான் மாநாடு படத்தின் பூஜை நடந்தது. சென்னையில் சில தினங்கள் ஷுட்டிங் நடைபெற்ற நிலையில் அதற்கு பிறகு ஹைதராபாத்தில் படத்தின் ஷுட்டிங்கை நடத்தியது படக்குழு. அதில் சிம்பு எஸ். ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியா முழுவதும் அதிகம் பரவியது. அதனால் படக்குழுவினரின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு ஷுட்டிங்கை நிறுத்தினர். அரசு ஷுட்டிங்கை நிறுத்த அறிவிப்பு வெளியிடும் முன்பே படக்குழு சென்னை வந்து சேர்ந்து விட்டது.

அதற்குப் பிறகு தற்போது வரை மீண்டும் ஷுட்டிங் துவங்காமல் தான் இருக்கிறது. அரசின் அறிவிப்புக்காக படக்குழுவினர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மாநாடு படம் டிராப் ஆகிவிட்டது என அடிக்கடி செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. அது உண்மையில்லை வதந்தி என சுரேஷ் காமாட்சி பலமுறை விளக்கம் கூறினாலும் மீண்டும் மீண்டும் மாநாடு கைவிடப்பட்டது என்ற செய்திகள் மீடியாக்கள், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி உலா வருகின்றன.

இந்நிலையில் ஒரு பிரபல நாளிதழில் மாநாடு படம் கைவிடப்பட்டதாக செய்து வெளியாகி இருக்கிறது. அதை பார்த்து கோபமான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். "இது போன்ற செய்திகள் இனி வந்தால் நான் நிச்சயம் வழக்கு தொடர்வேன். நான் இதுபோன்ற ஸ்டேட்மென்ட் எதுவும் கொடுக்கவில்லை. இந்த செய்தி உண்மையா என விசாரிக்காமல் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். மாநாடு படம் கைவிடப்பட போவதில்லை. தயவு செய்து வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.


சென்ற வாரம் இதே போன்ற ஒரு செய்தி வெளியான நிலையில் அது பற்றி சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் விளக்கம் அளித்திருந்தார். அரசின் அனுமதிக்காக தற்போது காத்துக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அது கிடைத்ததும் உடனே ஷூட்டிங் துவங்கும் என்றும் சுரேஷ் காமாட்சி கூறியிருந்தார்.

இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தான். இந்த படத்தில் தான் அவர் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். மாநாடு படம் அரசியல் சம்பந்தப்பட்டது என்பதால், ஷுட்டிங் ஸ்பாட்டில் அதிக அளவு துணை நடிகர்கள் தேவைப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அதிக எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்டு ஷுட்டிங் நடத்த அனுமதி கிடைத்த பிறகு தான் மாநாடு ஷுட்டிங் துவங்கும் என தெரிகிறது.

மாநாடு படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்து வருகிறார். அவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்து இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்