ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க விரும்புவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சிங்கம் 3' திரைப்படம் வரும் 9-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.இந்நிலையில் சிங்கம் 3 படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா பிசியாக உள்ளார்.சென்னையில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில்,பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலத்த சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
”நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புவது உண்மைதான்.கடந்த ஆண்டே இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தோம்.ஆனால் சில காரணங்களினால் அது நடைபெறவில்லை.மீண்டும் நடிப்பிலிருந்து அவர் இடைவேளை எடுப்பதற்குள்,இருவரும் இணைந்து ஒரு படம் நடிப்போம் என நம்புகிறேன்.
தான் முதலில் ஒரு தாய்,பின்னர் தான் நடிகை என ஜோதிகா என்னிடம் தெரிவித்துள்ளார்.தினந்தோறும் மேக்-அப் போட்டுக்கொண்டு,படப்பிடிப்புக்கு செல்வதை அவர் விரும்பவில்லை.ஓரிரு படங்களில் நடித்தால் போதும் என்றுதான் ஜோதிகா விரும்புகிறார்.ஆனாலும் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து நாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.கடந்த சில மாதங்களாக நல்ல கதைகளை கேட்டு வருகிறோம்.”என சூர்யா மனம் திறந்துள்ளார்.
Suriya and jyothika wants to act in a film together
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சிங்கம் 3' திரைப்படம் வரும் 9-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.இந்நிலையில் சிங்கம் 3 படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா பிசியாக உள்ளார்.சென்னையில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில்,பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலத்த சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
”நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புவது உண்மைதான்.கடந்த ஆண்டே இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தோம்.ஆனால் சில காரணங்களினால் அது நடைபெறவில்லை.மீண்டும் நடிப்பிலிருந்து அவர் இடைவேளை எடுப்பதற்குள்,இருவரும் இணைந்து ஒரு படம் நடிப்போம் என நம்புகிறேன்.
தான் முதலில் ஒரு தாய்,பின்னர் தான் நடிகை என ஜோதிகா என்னிடம் தெரிவித்துள்ளார்.தினந்தோறும் மேக்-அப் போட்டுக்கொண்டு,படப்பிடிப்புக்கு செல்வதை அவர் விரும்பவில்லை.ஓரிரு படங்களில் நடித்தால் போதும் என்றுதான் ஜோதிகா விரும்புகிறார்.ஆனாலும் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து நாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.கடந்த சில மாதங்களாக நல்ல கதைகளை கேட்டு வருகிறோம்.”என சூர்யா மனம் திறந்துள்ளார்.
Suriya and jyothika wants to act in a film together