ஆப்நகரம்

'சூர்யா 41' படத்துல இதெல்லாம் இருக்காது: ரசிகர்கள் தலையில் இடியை இறக்கிய சூர்யா..!

'எதற்கும் துணிந்தவன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் 'சூர்யா 41' படத்தில் நடித்து வருகிறார்.

Samayam Tamil 6 Apr 2022, 6:02 pm
'சூரரைப் போற்று' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' படம் வெளியானது. அண்மையில் ஓடிடியில் வெளியான சூர்யாவின் 'ஜெய் பீம்' படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' படத்திற்கான டெஸ்ட் ஷுட்டிங்கில் கலந்து கொண்டார் சூர்யா.
Samayam Tamil Suriya 41
Suriya 41


இதனிடையில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் துவங்கியது. 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். சூர்யா 41 என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.

இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. இந்தப்படத்தில் சூர்யா மீனவராக நடிப்பதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரியை அடுத்து மதுரையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இது 40 நாட்கள் ஷெட்யூல். அதனை தொடர்ந்து படக்குழுவினர் கோவாவிற்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாஜி கணவருக்காக சமந்தா செய்த காரியம்: ஆடிப்போன ரசிகர்கள்..!
இந்நிலையில் இந்தப்படத்தில் சிலவற்றை தவிர்க்க வேண்டுமென சூர்யா, பாலாவிடம் கேட்டு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி படத்தில் வன்முறைகள் காட்சிகள் மற்றும் தவறான வார்த்தைகளும் இடம் பெறக்கூடாது என சூர்யா கேட்டு கொண்டுள்ளதாகவும், அதற்கு பாலாவும் சம்மதித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாக பாலா படங்களில் வன்முறை காட்சிகள் அதிகமாகவே இடம் பெறும். அதுதான் பாலா படங்களுக்கான அடையாளமாகவே ரசிகர்கள் கருதுவார்கள். இந்நிலையில் 'சூர்யா 41' அதெல்லாம் இருக்காது என வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்