ஆப்நகரம்

கதை திருட்டு சர்ச்சையில் சூர்யா படம்: நஷ்ட ஈடு வழங்கி சமாளிப்பு!

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படம் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ளது.

Samayam Tamil 11 Oct 2021, 1:59 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனம் 2டி என்டர்டெயின்மெண்ட். பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமல்லாமல் சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரிக்கிறது 2டி என்டர்டெயின்மெண்ட். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் அண்மையில் வெளியான படம் ஒன்றுகதை திருட்டு விவாகரத்தில் சிக்கியது.
Samayam Tamil Suriya
Suriya


அண்மையில் 2டி என்டர்டெயின்மெண்ட் அமேசான் பிரைம் வீடியோவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் 4 படங்கள் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் என அறிவித்தனர். முதல் படமாக ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படம் வெளியானது.

புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கி இருந்த இந்தப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. 2016 ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான ரங்கா படாங்கா படத்தின் கதையை அப்பட்டமாக தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக கூறி சர்ச்சைகள் எழுந்தன. இந்த விஷயம் சூர்யா காதுக்கு எட்டியவுடன் படத்தின் இயக்குனர் அரிசில் மூர்த்தியை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார்.

அதனை தொடர்ந்து மராத்தி படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடாக பெரும் தொகையும் அளித்துள்ளார் சூர்யா. ஒரு படம் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியதை அறிந்து, படத்தின் தயாரிப்பாளரே தாமாக முன்வந்து நஷ்டஈடு கொடுத்திருப்பது இதுதான் முதல்முறை. சூர்யா தயாரித்து நடித்துள்ள ‘ஜெய் பீம்’ தீபாவளி வெளியீடாக நவம்பர்2 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்