ஆப்நகரம்

தெலுங்கில் பேசி ரசிகர்களை கவர்ந்த அண்ணன் – தம்பி!

Samayam Tamil 6 Jul 2018, 4:47 pm
கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் வெளியாகவுள்ள நிலையில், தெலுங்கு பேசி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர்.
Samayam Tamil 11


தமிழ் சினிமா நடிகர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் பற்றி சொல்லவே வேணாம். இவர்களைத் தவிர, தளபதி விஜய்க்கு கேரளா ரசிகர்கள் ஏராளம். தெலுங்கில் ரஜினிகாந்த்துக்கு மட்டும் தான் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவரைத் தொடர்ந்து தற்போது சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் உள்ளனர்.

சூர்யா மற்றும் கார்த்தி கூட்டணியில் தற்போது கடைக்குட்டி சிங்கம் படம் உருவாகியுள்ளது. காமெடி மற்றும் விவசாயத்தை மையப்படுத்திய இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த நிலையில் படத்தின் புரோமோஷனுக்கான விசாகப்பட்டிணம் சென்றிருந்த படக்குழுவினர், அங்கு தெலுங்கில் பேசி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர்.

தனது அரைகுறை தெலுங்கில் பேசிய சூரியைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்துள்ளனர். மேலும், அவர் தான் எப்படி தெலுங்கு கற்றுக் கொண்டேன் என்பதை அந்த நிகழ்ச்சியின் போது விளக்கமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து பேசிய கார்த்தி கூறுகையில், இப்படத்தில் சின்ன பாபுவாக (கடைக்குட்டி சிங்கம்) நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், இப்படத்தில் ஒரு விவசாயியாக நடித்துள்ளதற்கு நான் மிகவும் பெருமைப் படுவதாக கூறியுள்ளார்.

இறுதியில் பேசிய சூர்யா கூறுகையில், முதலில் தெலுங்கில் தனது உரையை ஆரம்பித்து பிறகு ஆங்கிலத்தில் பேசினார். இந்தப் படம், விவாயியாக பிறந்த அனைவருக்கும் சமர்ப்பணம் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்