ஆப்நகரம்

இதுக்கு போய் பெரிய கம்பெனி படத்தில் நடிக்க மறுத்தாராம் சூர்யா!

பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் சூர்யா நடிக்க மறுத்தது குறித்து சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Nov 2019, 1:10 pm
பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் சூர்யா நடிக்க மறுத்தது குறித்து சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil suriya refuses a big movie offer wanna know the reason
இதுக்கு போய் பெரிய கம்பெனி படத்தில் நடிக்க மறுத்தாராம் சூர்யா!


சத்யராஜ் பேச்சு

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள தம்பி படம் டிசம்பர் மாதம் 20ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் சிவகுமார் குடும்பத்தார், படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ் கூறியதாவது, ஒரு குடும்பம் என்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது என்றால் அது சிவகுமாரின் குடும்பம் தான் என்று தெரிவித்தார்.

சிவகுமார் அறிவுரை

45 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடிக்க வந்தபோது அண்ணன் சொன்னார், நடிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. நான் முதல் படமான காக்கும் கரங்களில் கையை முகத்திற்கு அருகில் வைத்து ராதா நீ ரொம்ப அழகா இருக்க, இதை யாருமே உன்கிட்ட சொன்னது இல்லையா என்று வசனம் பேச உதவி இயக்குநர் வந்து யோவ், கையை கீழே இறக்குய்யா மூஞ்சியை மறைக்குதுன்னார். மீண்டும் அந்த வசனத்தை பேசியபோது யோவ் கை ஃபிரேமிலேயே வரவில்லை இன்னும் கொஞ்சம் மேலே தூக்குய்யா என்றார். இந்த கை ஒரு பெரிய பிரச்சனைன்னு அண்ணன் மிரட்டிவிட்டார்.

தூக்கத்தை இழந்தேன்

நான் உஸ்மான் ரோட்டில் ரூ. 85 வாடகையில் ஒரு வீட்டில் குடியிருந்தேன். அங்கு போய் கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு டேய் சத்யராஜ் கை மூஞ்சியை மறைக்குது கீழே இறக்கு, டேய் சத்யராஜ் கை கண்ணாடிலேயே தெரியல மேலே தூக்கு என்று ஒரு வாரம் தூக்கம் இல்லாமல் செய்தது சிவகுமார் அண்ணன் தான். அதன் பிறகு ஒவ்வொரு விஷயத்திலும் இந்த குடும்பம் என்னை பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. சிவகுமார் அண்ணா மாதிரி ஒரு நல்ல அப்பாவா இருக்க முடியுமான்னு பயம், அவரை போன்று ஒரு நல்ல கணவராக இருக்க முடியுமான்னு பயம், லட்சுமி அக்கா மாதிரி ஒரு நல்ல குடும்பத் தலைவி கிடைப்பாங்களான்னு பயம், இப்படி ஒரு நல்ல மகன்கள் கிடைப்பாங்களான்னு பயம், இப்படி ஒரு நல்ல குடும்பம் அமையுமா, பேரன், பேத்தி அமையுமான்னு பயமுறுத்திக்கிட்டே இருக்கும் குடும்பம் சிவகுமார் அண்ணனின் குடும்பம் தான்.

சூர்யா படம்

காக்க காக்க படத்தில் சூர்யா நடித்தபோது கிளைமாக்ஸில் ஒரு வசனத்தை பேச வேண்டும் மாமா, முடியுமா என்று என்னிடம் கேட்டார். நானும் சரி என்றேன். தன் காரில் வந்து என்னை பிக்கப் செய்தார். அப்பொழுது நான் அவரிடம் என்ன சூர்யா, பெரிய கம்பெனி படத்தில் நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டியே என்றேன். அதற்கு அவரோ, கேமரா மேனை மாத்திட்டாங்க மாமா, அதனால் தான் நடிக்க மாட்டேன்னு சொன்னேன் என்றார். கார்த்தி பக்கத்தில் உட்கார்ந்தேன். முந்தாநாள் மும்பைக்கு சென்றேன், ஒரு சூப்பரான படம் மிக்ஸிங் சரியில்லாமல் கெட்டுப் போச்சு மாமா என்று கார்த்தி சொன்னார். நாங்கள் எல்லாம் இதை பற்றி யோசித்ததே இல்லை. இளைஞர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

சந்திரமுகி பார்த்து பயந்தேன்

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் பேய் மீதும் நம்பிக்கை இருக்காது அல்லவா?. ஆனால் சந்திரமுகி படம் பார்த்த பிறகு தனியாக படுக்க பயந்தேன். நான் பேய் படமே பார்க்க மாட்டேன். பேய் படம் என்றால் பயம். பிருந்தா ஒரு சூப்பர் சிங்கர். சூர்யா, கார்த்தியிடம் இருந்து சினிமா பற்றிய புது விஷயங்களை தெரிந்து கொண்டேன். நல்ல முதலாளிகளும், தொழிலாளிகளும் சிவகுமார் குடும்பத்தில் தான் உள்ளார்கள் என்றார் சத்யராஜ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்