ஆப்நகரம்

எஸ்பிபி சார் உங்களுக்கு அழிவே இல்லை.. சூர்யா, விக்ரம் இரங்கல்

எஸ்பிபி மறைவு பற்றி சூர்யா மிக உருக்கமாக ட்விட் செய்துள்ளார்.

Samayam Tamil 26 Sep 2020, 8:52 am
பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு சினிமா துறை பிரபலங்கள் மிக உருக்கமாக சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Samayam Tamil Vikram Suriya SPB


தற்போது நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் எஸ்பிபிக்கு அழிவே இல்லை என பதிவிட்டு உள்ளார். அவர் கூறி இருப்பதாவது..

"என் இதயத்தில் பெரிய வருத்தத்தை இது ஏற்படுத்தி இருக்கிறது. வாழ்க்கை முழுவதும் இருக்கும் மகிழ்ச்சியான தருணத்தை இழந்தது போல உணர்கிறேன். எஸ்பிபி சார் உங்களுக்கு அழிவே இல்லை.. உங்கள் சாதனைகளை வேறு ஒருவரால் செய்ய முடியாது. பணிவாக இருப்பது என்றால் என்ன என்பதை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி. உங்களது பாடல்களை வாழ்க்கை முழுவதும் நினைவில் கொள்வேன். என் பிரார்த்தனைகள்" என எஸ்பிபிக்கு அவர் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.


விக்ரம் வெளியிட்டு இருக்கும் இரங்கல் செய்தியில்..

"மொழி பேதம் இன்றி இந்த உலகில் இசை பிடிக்கும் எனில், இவரை பிடிக்கும். இவரது குரலின் வலம், கம்பிரம், அழகு, இவருடைய இசை ஞானம் அனைத்தையும் பல ஆண்டுகளாக ரசித்து போற்றிய கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். திரு S.P.B. அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என விக்ரம் கூறி உள்ளார்.

இன்று எஸ்பிபி யின் உடல் அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட உள்ளது என நேற்று முதலமைச்சர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதற்கு சினிமா துறை பிரபலங்கள் பலரும் நன்றி தெரிவித்தும் வருகிறார்கள்.

நடிகர் பார்த்திபன் பதிவிட்டு இருக்கும் ட்விட்டில் "RIP-Spb- வீடியோ பதிவு செய்த பின் அரசுக்கு விண்ணப்பம் வைக்க உணர்ச்சி மிகுதியில் மறந்து விட்டேன் என நினைத்தேன். அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை என அறிவித்த தமிழக அரசுக்கு spb சாரின் ரசிகர்களின் சார்பில் நன்றி!" என கூறி உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்