ஆப்நகரம்

பீஸ்ட், கேஜிஎஃப் 2 படங்களுக்கு முன் வெளியாகும் சூர்யாவின் படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 1 Apr 2022, 7:55 am
சூரரைப் போற்று படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'எதற்கும் துணிந்தவன்'. அண்மையில் வெளியான சூர்யாவின் 'ஜெய் பீம்' படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு கடந்த மார்ச் 10 ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியானது சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படம்.
Samayam Tamil Suriya
Suriya


பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிததுள்ளார். மேலும் இந்தப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

'எதற்கும் துணிந்தவன்' படம் வெளியாவதற்கு முன்பாகவே 'ஜெய் பீம்' பட விவகாரத்தால் பல திரையரங்குகளில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க மற்றும் வன்னியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையெல்லாம் கடந்து திரையரங்குகளில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

நெட்டிசன் கேட்ட 'ஒத்த' கேள்வி: யாஷிகாவின் பதிலால் ஆடிப்போன ரசிகர்கள்...!
இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சன் நெக்ஸ்ட், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளங்களில் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது இந்தப்படம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் விஜய்யின் 'பீஸ்ட்' மற்றும் கே.ஜி.எப். 2 படங்களும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படங்களுக்கு முன்பாக ‘எதற்கும் துணிந்தவன்’ படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்