ஆப்நகரம்

சூர்யா- கேவி ஆனந்த் இணையும் படம் லண்டனில் படபூஜை!

நடிகர் சூர்யாவின் புதிய படம் லண்டனில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 26 Jun 2018, 5:44 pm
நடிகர் சூர்யாவின் புதிய படம் லண்டனில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
Samayam Tamil surya 371


நடிகர் விஜய்யின் ‘கத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்த வைத்த நிறுவனம்தான் ‘லைகா’ நிறுவனம். இந்த நிறுவனம் கமல், ரஜினி, விஜய்யை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளது. மேலும் பல படங்களை வாங்கி வெளியீட்டு வருகிறது.

தற்போது நடிகர் சூர்யாவின் புதிய படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கான பூஜை நேற்று லண்டனில் நடைபெற்றது. இது சூர்யாவின் 37வது படமாகும். இந்த பட பூஜையில் சூர்யா, சாயிஷா, கே.வி.ஆனந்த் லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றே தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் மோகன்லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொமன் இரானி உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இது ஒரு அதிரடி ஆக்சன் படம். இந்தப் படத்தில் சூர்யா நான்கு கேரக்டரில் நடிக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்