ஆப்நகரம்

குறும்பட இளம் இயக்குனர்களை சூர்யா ஏமாற்றினாரா?

குறும்பட இளம் இயக்குனர்களை நடிகர் சூர்யா ஏமாற்றியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

TNN 25 May 2017, 6:03 pm
குறும்பட இளம் இயக்குனர்களை நடிகர் சூர்யா ஏமாற்றியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Samayam Tamil surya cheated young directors
குறும்பட இளம் இயக்குனர்களை சூர்யா ஏமாற்றினாரா?


சினிமாவில் இயக்குனராக வரவேண்டுமென்றால் பல கஷ்டங்கள் படவேண்டியிருக்கும். பிரபல இயக்குனரிடம் உதவியாளராக சேரவேண்டும். பின் தான் சினிமாவில் நுழைய வேண்டும்.

ஆனால் இப்போதெல்லாம் நிலைமையே வேறு, ஒரு குறும்படம் இயக்கி அது வெற்றிபெற்றாலே எளிதாக சினிமாவில் நுழைய முடிகிறது. அந்த வகையில் குறும்பட இயக்குனர்களுக்கு நடிகர் சூர்யா ஒரு போட்டி அறிவித்தார். மூன்றே நிமிடங்களுக்குள் யார் அழகாக ஒரு கதையைச் சொல்கிறார்களோ அவர்களுக்கு பணப் பரிசும், சூர்யாவுடைய 2டி நிறுவனத்தில் கதை சொல்ல ஒரு வாய்ப்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில் வென்ற மூவருக்கு ரூ. 3, 2 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. ஆனால் சொன்னது போல் அவர்களுக்கு கதை சொல்லும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கதை கேட்பதற்கு பதிலாக மூவருக்கும் சூர்யாவின் நிறுவனத்தில் இண்டெர்ன்ஷிப் வழங்கப்படும் என சொல்கிறார்களாம். சூர்யாவின் இந்த முடிவு அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்