ஆப்நகரம்

முதன்முறையாக தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா!

நடிகர் சூர்யா முதன்முறையாக ‘கேங்’ படத்திற்கு தெலுங்கில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார்.

TNN 15 Dec 2017, 3:10 pm
நடிகர் சூர்யா முதன்முறையாக ‘கேங்’ படத்திற்கு தெலுங்கில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார்.
Samayam Tamil surya did telugu dubbing for first time
முதன்முறையாக தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா!


அஜீத், விஜய்யை விட நடிகர் சூர்யாவுக்கு தெலுங்கில் அதிக ரசிகர்கள் உள்ளனர். நடிகர் சூர்யா தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் படம் தெலுங்கில் ‘கேங்’ என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. இதுவரை சூர்யா நடித்து தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் படங்களுக்கு அவரே தெலுங்கில் டப்பிங் பேசியதில்லை. ஆனால், முதல் முறையாக ‘தானா சேர்ந்த கூட்டம்‘ படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘கேங்’ படத்தில் சூர்யாவே டப்பிங் பேச உள்ளார் எனத் தெரிகிறது.

நேற்று தெலுங்கில் வெளியான ‘கேங்’ டீசருக்கு சூர்யா தெலுங்கில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார். டீசரில் சூர்யாவின் தெலுங்கு உச்சரிப்பு நன்றாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். நேற்று இரவு வெளியான டீசருக்கு அதற்குள் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன.



படத்தில் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், கார்த்தி ஆகியோரும் உள்ளதால் தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ‘கேங்’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்