ஆப்நகரம்

சூர்யா - கே.வி.ஆனந்த் இணையும் படம் பொங்கல் ரீலீஸ்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள படம் அடுத்த ஆண்டு பொங்கலன்று வெளியாகவுள்ளது.

Samayam Tamil 4 Jun 2018, 4:45 pm
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள படம் அடுத்த ஆண்டு பொங்கலன்று வெளியாகவுள்ளது.
Samayam Tamil suriya


நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து தனது 37வது படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இந்தப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது. இந்த படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 23-ந்தேதி லண்டனில் தொடங்கவுள்ளது. அத்துடன் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில் உள்பட 10 நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. சூர்யா நடித்துள்ள ‘என்ஜிகே’ படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. மேலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் அவரது இந்த 37வது படத்தை வருகிற பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்