ஆப்நகரம்

சுந்தர்.சி படத்தில் நடிக்கவில்லை:நடிகர் சூர்யா தரப்பில் விளக்கம்

.தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக சுந்தர்.சி இயக்க இருக்கும் திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிப்பதாக கூறப்படுவது என்பது வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது.

TNN 14 Jun 2016, 1:44 pm
பல வெற்றிப்படங்களை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸின் 100-ஆவது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்க இருக்கிறார்.பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட உள்ள இந்த திரைப்படம் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கப்படுவது மட்டுமின்றி,ஹிந்தியிலும் வெளியாக உள்ளது.
Samayam Tamil surya signs in sundar c film is a rumour
சுந்தர்.சி படத்தில் நடிக்கவில்லை:நடிகர் சூர்யா தரப்பில் விளக்கம்


இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர் சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ள நடிகர் சூர்யா தரப்பினர்,சுந்தர்.சி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படும் செய்தி வெறும் வதந்தி எனவும்,அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் எனவும் தெரிவித்துள்ளது.சுந்தர்.சி மனைவியான குஷ்புவும் தனது டிவிட்டர் பக்கத்தில்,’நடிகர்கள் தேர்வு இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ என தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் சென்னை-28 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யா கெளரவ வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.ஆனால் இந்த தகவலும் சூர்யா தரப்பிலிருந்து மறுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்