ஆப்நகரம்

அஜித் வழியில் படக்குழுவினருக்கு பிரியாணி பார்ட்டி கொடுத்த சூர்யா..!

‘காப்பான்’ படத்திற்கான படப்பிடிப்பில் படக்குழுவினர் அனைவருக்கும் நடிகர் சூர்யா பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 22 Feb 2019, 1:58 am
‘காப்பான்’ படத்திற்கான படப்பிடிப்பில் படக்குழுவினர் அனைவருக்கும் நடிகர் சூர்யா பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வர்கிறது.
Samayam Tamil ’காப்பான்’ பட படப்பிடிப்பில் பிரியாணி விருந்து கொடுத்து அசத்திய சூர்யா


கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தயாராகி வரும் ’காப்பான்’ படத்தில் சூர்யா மற்றும் மோகன்லால் சம்மந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்தது. அதை முன்னிட்டு பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது, கதாநாயகன் சூர்யா படக்குழு அனைவருக்கும் தனது சொந்த செலவில் சிறப்பான பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார். மேலும் அவர்களுக்கு தன் கையாலேயே உணவு பரிமாறி உள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் போது ‘காப்பான்’ பட ஒளிப்பதிவாளரான எம். பிரபு புகைப்படங்களை எடுத்துள்ளார். அப்போது சூர்யா உணவு பரிமாறியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக தான் நடித்த எந்த படங்களின் போதும், பிரியாணி விருந்து கொடுக்கும் பழக்கம் சூர்யாவுக்கு கிடையாது. அஜித்தான், அவர் கையாலேயே பிரியாணி செய்து அசத்துவார். இப்போது சூர்யாவும் அந்த வழக்கத்தை பினபற்றியுள்ளார்.

லைக்கா புரடெக்‌ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘காப்பான்’ படம் அகஸ்டு 15ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்