ஆப்நகரம்

தமிழ் ராக்கர்ஸை காப்பாற்றும் விஷால்; பதவி விலக போர்க்கொடி உயர்த்தும் தயாரிப்பாளர்கள்!

விஷால் மீது தயாரிப்பாளர்கள் சங்கக் குழுவினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 26 Sep 2018, 8:07 pm
சென்னை: விஷால் மீது தயாரிப்பாளர்கள் சங்கக் குழுவினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil Producers Council
தயாரிப்பாளர்கள் சங்கம்


சென்னையில் தயாரிப்பாளர்கள் பாரதிராஜா, ராஜன், ராதாரவி, டி. ராஜேந்தர், ஜே.கே ரித்தீஷ் உள்ளிட்டோர் சங்கப் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர்.

டி.ராஜேந்தர் பேசுகையில், நடிகர் சங்கத்தின் வைப்பு நிதி ரூ.7 கோடி எங்கே? பொதுக்குழுவில் கணக்கு கேட்கப்பட்டது. பதிலில்லை. மூத்தவர்கள் பிரிந்து கிடப்பதால் தான், யார் யாரோ பதவிக்கு வருகிறார்கள்.

நாம் ஒன்றிணைய வேண்டும். லைக்காவுடன் கூட்டு விஷால் கூட்டு வைத்துள்ளார். க்யூப் கட்டணத்தை குறைக்க போராட்டம் நடத்தியதன் விளைவு என்ன? என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து பாரதிராஜா பேசுகையில், தயாரிப்பாளர்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பெயரை, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என மாற்ற வேண்டும். பின்னர் பேசிய ராதாரவி, தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடித்து விட்டதாக விஷால் கூறுகிறார்.

அவர்கள் யாரென்று தெரிவிக்காமல் ஆதரவளிப்பது ஏன். சங்க விதிமுறைகளில் பல குளறுபடிகள் உள்ளன. விஷால் பதவி விலக வேண்டும் என்று கூறினார்.

*Disclaimer: டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் (சமயம்) திருட்டுதனமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இணையதளங்களை என்றுமே ஆதரிக்காது. இது செய்திக்காக மட்டுமே விளம்பரத்திற்கு அல்ல.

அடுத்த செய்தி

டிரெண்டிங்