ஆப்நகரம்

சிம்பு திருமணம் குறித்த கேள்விதான் எனக்கு தர்ம்சங்கடமாக உள்ளது: கலங்கிய டி.ஆர்

”சிம்புவின் திருமணம் குறித்த கேள்விதான் மனத்தாங்கலாக உள்ளது. ஆதங்கம் எல்லாம் இறைவன் மீதும், விதியின் மீதும் தான்” கலக்கத்துடன் பேசிய டி. ராஜேந்திரன்

Samayam Tamil 30 Apr 2019, 9:49 pm
சிம்புவின் திருமணம் குறித்து கேட்கும் போது எல்லாம் தர்ம சங்கடமாக இருப்பதாகவும், இப்படி கேட்கும் அளவுக்கு ஆண்டவன் என்னை வைத்துவிட்டான் என இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil சிம்புவுக்கு திருமணம் எப்போது
சிம்புவுக்கு திருமணம் எப்போது..? கலத்துடன் டி.ஆர். பதில்..!


கடந்த 26ம் தேதி டி. ராஜேந்திரனின் இளையமகனும் இசையமைப்பளருமான குறளரசனுக்கும் நபீலாவுக்கும் திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து நடைபெற்ற திருமண வரவேற்பில் திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிந்து டி. ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைத்து பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தான் இருக்கின்றனர். அதனால் தான் குறளரசன் விரும்பிய பெண்ணை அவருக்கு மணமுடித்து வைத்தோம். எனக்கு எம்மதமும் சம்மதம் என்று பேசினார்.

அப்போது சிம்புவின் திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த போது டி.ஆர் கணகலங்கியவாறு பேசினார். சிம்பு திருமணம் குறித்து பேசும் போது எல்லாம் எனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது. என் வருத்தம் எல்லாம் ஆண்டவன் மீதும், விதியின் மீதும் தான் என்று டி. ராஜேந்தர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்