ஆப்நகரம்

சக கதாநாயகிகளோடு, நான் வாங்கும் சம்பளம் குறைவாகவே உள்ளது: டாப்சி

நடிகைகள் சம்பளத்தை உயர்த்துவதற்கான காரணம் குறித்து டாப்சி கூறியுள்ளார்.

Samayam Tamil 21 Oct 2019, 10:07 am
கோலிவுட்டில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் டாப்சி. அது நல்ல வரவேற்பைப் பெற்றதால் ஆரம்பம், காஞ்சனா போன்ற வெற்றி படங்களைக் கொடுத்தார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.
Samayam Tamil 9136242


இவர் இந்தியில் நடிக்கும் படங்கள் அனைத்தும் வசூலில் வாரிக் குவித்து வருவதால், அங்கு வாய்ப்புகள் இவரைத் தேடி குவிந்து வருகின்றன. இதனால் டாப்சிக்கு சம்பளமும் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து டாப்சி கூறியதாவது, ' சினிமா துறையில் தற்போது தான் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கி உள்ளனர். அவர்களுக்குக் கொடுக்கிற சம்பளமும் உயர்ந்து உள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றம்.

பாலிவுட்டில் கால்பதிக்கும் கன்னக்குழி அழகி ஷாலினி பாண்டே!

இந்தியில் டாப் ஹீரோயின்கள் ரூ.20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதை இந்த மாற்றத்துக்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். இப்போது ஹீரோயிண்னுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதுவும் அந்த படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்கிறது.

1 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்த பிகில் டிக்கெட், எங்கு தெரியுமா?

அதனால் கூட நடிகைகள் சம்பளம் உயர்த்துவதற்குக் காரணமாக இருக்கும். என்ன தான் சம்பளம் உயர்த்தி கேட்டாலும், அது கதாநாயகர்களோடு ஒப்பிட்டால் நிறைய வித்தியாசம் வருகிறது. இந்த வித்தியாசம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி படங்களிலும் உள்ளது.

இரண்டு ஆண்டுகளாக நான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறேன். ஆனால் சக கதாநாயகிகளோடு என்னை ஒப்பிட்டால் நான் வாங்கும் சம்பளம் குறைவாகவே உள்ளது. எனக்கு பணம் முக்கியம் இல்லை. நான் ஒரு நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகே பணத்தை பற்றி யோசிப்பேன்' என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்