ஆப்நகரம்

ராஜமௌலி விழாவில் தன்னை கண்டுக்கவில்லையாம்: கோபத்தில் தமன்னா!

இயக்குனர் ராஜமௌலி சமீபத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் விழாவில் நடிகை தமன்னாவை பற்றி எதுவும் கூறவில்லை என்று தமன்னா கோபப்பட்டுள்ளாராம்.

TNN 30 Mar 2017, 3:17 pm
இயக்குனர் ராஜமௌலி சமீபத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் விழாவில் நடிகை தமன்னாவை பற்றி எதுவும் கூறவில்லை என்று தமன்னா கோபப்பட்டுள்ளாராம்.
Samayam Tamil tamannaah angry with rajamouli
ராஜமௌலி விழாவில் தன்னை கண்டுக்கவில்லையாம்: கோபத்தில் தமன்னா!


ராஜமௌலியின் பிரமாண்ட படமான பாகுபலியில் அவந்திகா என்ற மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் தமன்னா. இரண்டாவது பாகம் அடுத்த மாதம் 28ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், சமீபத்தில் தான் படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா மிக பிரமாண்டமாக நடந்தது. அந்த விழாவில் எல்லாரையும் பற்றி பேச நேரம் கிடைக்கவில்லை. கிடைத்த நேரத்தில்கூட படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த தமன்னாவை பற்றிக்கூட பேசவில்லையாம். இதனால் தமன்னா ராஜமௌலி மேல் கோபத்தில் உள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

படத்தில் பணியாற்றியவர்கள் பற்றி பேச அதிக நேரம் கிடைக்கவில்லை என்பதால், ட்விட்டரில் அனைவரும் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார் இயக்குனர் ராஜமௌலி. ஆனால் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த தமன்னாவை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.
அதனால் இருவருக்கும் இடையே எதோ பிரச்சனை வந்துள்ளது என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்