ஆப்நகரம்

ஹீரோக்களிடம் யாரும் இந்த கேள்வியை கேட்பதில்லை: தமன்னா காட்டம்

அதிக சம்பளம் கேட்டு அதை தராததால் முன்னணி ஹீரோ படத்தில் இருந்து தமன்னா விலகிவிட்டார் என பரவிய செய்தியை அவர் மறுத்துள்ளார்.

Samayam Tamil 20 May 2020, 12:26 pm
தமன்னா தற்போது போலே சுடியான் என்கிற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். நடிகர் நாவாசுதீன் சித்திக் ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தினை அவரது சகோதரர் தான் இயக்கியுள்ளார்.
Samayam Tamil Tamannaah


தமிழில் தமன்னா கைவசம் எந்த புதிய படங்களும் இல்லை. கடைசியாக அவர் விஷாலின் ஆக்ஷன் படத்தில் தான் நடித்திருந்தார். அவரது நடிப்பில் குயீன் பட தெலுங்கு ரீமேக் படம் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் தமன்னாவுக்கு ரவி தேஜா ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது என்றும், ஆனால் அதில் நடிக்க தமன்னா மறுத்துவிட்டார் என்றும் செய்திகள் பரவியது. தமன்னா அதிக சம்பளம் கேட்ட நிலையில் அதை தர தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை என்பதால் தான் தமன்னா அந்த படத்தை நிராகரித்தார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த செய்தி பற்றி தமன்னா கோபமாக கருத்து தெரிவித்துள்ளார். இது போன்ற கற்பனையான கதைகள் உண்மையல்ல என அவர் விளக்கம் கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் தன்னை அனுகியது உண்மை தான் என கூறியுள்ள அவர், அது நடந்தது கடந்த பிப்ரவரி மாதம் என குறிப்பிட்டுள்ளார். தற்போது கொரோனா லாக்டவுன் நேரத்தில் எந்த தயாரிப்பு நிறுவனமும் பேச்சுவார்த்தையை தொடரவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் தன்னுடைய சம்பளம் பற்றி பேசிய தமன்னா அதை நிர்ணயிக்க வேண்டியது தன்னுடைய தனி உரிமை என கூறியுள்ளார். தனக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என்பதையும் அதில் எதாவது குறைத்து கொள்ளலாமா என்பதையும் நான் தான் முடிவு செய்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

நடிகைகள் மட்டுமே சம்பளத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்கிறார்கள், ஆனால் நடிகர்களிடம் அந்த கேள்வியை யாரும் கேட்பதில்லை. இந்த முறையை ஒழிக்க வேண்டும். நாங்களும் அதிகம் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். ஒவ்வொரு படத்திற்கும் ஹீரோ போலவே ஹீரோயினும் தேவை.

அதிக சம்பளம் வாங்குவது என்ன ஆண்களுக்கு மட்டும் தானா, பெண்களுக்கு அது இல்லையா என கோபத்துடன் கேட்டுள்ளார் அவர்.

ஹீரோக்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மற்றும் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாக பாலிவுட் உட்பட பல சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் இதற்கு முன்பு பேசியுள்ளனர். தற்போது தமன்னா அதை வெளிப்படையாகவே குற்றச்சாட்டாக வைத்துள்ளார்.

தமன்னா தற்போது நடித்து முடித்துள்ள பாலிவுட் படம் போலே சுடியான் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து முடிந்துள்ளது. அதனால் அது கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது.

மேலும் தமன்னா அடுத்து கன்னட சினிமாவிலும் கால் பதிக்க உள்ளார். கேஜிஎப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் யாஷ் உடன் ஆடியிருப்பார் அவர்.

அடுத்து அவருக்கு ஜோடியாக ஒரு முழு படத்திலும் தமன்னா நடிக்க உள்ளதாக செய்திகள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. யாஷ் கேஜிஎப் 2ம் பாகத்தின் ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவரது அடுத்த படத்திற்கு தான் தமன்னா ஹீரோயினாக தேர்வாகியுள்ளார் என கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்