ஆப்நகரம்

'பாகுபலி 2'குறித்து மனம் திறக்கும் தமன்னா

கடந்த ஆண்டு இயக்குனர் ராஜாமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பான 'பாகுபலி' திரைப்படம் வெளியானதில் இருந்து 'கட்டாப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' என்ற எதிர்ப்பார்ப்பு மிகுந்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

TNN 8 Nov 2016, 6:27 pm
கடந்த ஆண்டு இயக்குனர் ராஜாமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பான 'பாகுபலி' திரைப்படம் வெளியானதில் இருந்து 'கட்டாப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' என்ற எதிர்ப்பார்ப்பு மிகுந்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
Samayam Tamil tamannaah on her role in baahubali 2
'பாகுபலி 2'குறித்து மனம் திறக்கும் தமன்னா


இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற நாயகி தமன்னா, 'பாகுபலி 2' படத்தில் வரும் தனது கதாப்பாத்திரம் குறித்து மனம் திறந்திருக்கிறார். 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்' என்ற கேள்வியை கேட்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக் கூறியுள்ளார். படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது.

இந்த கேள்வியை எப்பொழுது கேட்டாலும், சிரித்துக் கொண்டே காத்திருக்கும்படி கூறுவேன் எனக் கூறிய தமன்னா, 'பாகுபலி 2' படத்தில் அதிகம் சண்டைக் காட்சிகளில் நடித்திருப்பதாகவும், தனது பகுதியை நடித்து முடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகளில் சண்டை போட்டுள்ளதாகவும், அதில் வந்த அதே தைரியமான அவந்திகாவாக இரண்டாம் பாகத்திலும் வருவதாக தமன்னா கூறியுள்ளார்.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பாகுபலி 2' திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்