ஆப்நகரம்

கத்துக்கணும்யா சுந்தர் சி.யிடம் இருந்து பிற இயக்குநர்கள் கத்துக்கணும்: தமன்னா

ஆக்ஷன் பட இயக்குநர் சுந்தர் சி.யை புகழ்ந்து பேசியுள்ளார் தமன்னா.

Samayam Tamil 14 Nov 2019, 11:58 am
சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ள ஆக்ஷன் படம் நாளை ரிலீஸாக உள்ளது. ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் காட்சிகளை வைத்துள்ளார் சுந்தர் சி.
Samayam Tamil tammanna


ரிஸ்க் எடுத்து நடித்தபோது தன் சாவை தன் கண்ணாலேயே பார்த்ததாக தெரிவித்தார் விஷால். ஆக்ஷன் படத்தில் விஷாலுடன் சேர்ந்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார் தமன்னா.

காதல் முறிவு: சனம் ஷெட்டிக்காக தான் 'அப்படி' ட்வீட் போட்டாரா தர்ஷன்?

தமன்னா என்றால் டூயட் பாடுவார், மழையில் நனைந்து கொண்டு டான்ஸ் ஆடுவார் என்று இருக்கும் இமேஜை இந்த படம் மூலம் மாற்றிவிடுவார் போன்று. ஆக்ஷன் படத்தில் நடித்தது குறித்து தமன்னா கூறியிருப்பதாவது,

நானும், விஷாலும் கமாண்டோக்களாக நடித்துள்ளோம். ஹாலிவுட் படங்களில் எப்படி பெண் கதாபாத்திரம் தைரியமானதாகவும், கிளாமராகவும் இருக்குமோ, அதே போன்று இந்த படத்தில் என் கதாபாத்திரம் இருக்கும்.

பெண் கதாபாத்திரத்தை வலுவானதாக அமைத்துள்ளார் சுந்தர் சி. அவரை போன்று மேலும் பல இயக்குநர்கள் தங்கள் படங்களில் பெண்களுக்கு வலுவான கதாபாத்தரம் கொடுக்க வேண்டும்.

நான் விஜய் சார்,அஜீத் சார் படமா பண்ணியிருக்கேன்? சின்ன படங்களை சாவடிக்கிறாங்க: சிம்பு பட தயாரிப்பாளர் குமுறல்

நான் வழக்கமாக ஒரு பட ஷூட்டிங்கிற்கு வந்தால் வசன பேப்பர்களை கொடுத்துவிட்டு காட்சிகள் குறித்து விளக்குவார்கள். ஆனால் ஆக்ஷன் படம் அப்படி இல்லை. இங்கிருந்து நீங்கள் அங்கு குதிக்க வேண்டும், அவரை துரத்திக் கொண்டு ஓட வேண்டும், அதன் பிறகு ஆக்ஷன் காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். படத்தில் பேச்சு குறைவு ஆக்ஷன் தான் அதிகம்.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் இனி என்னால் மேலும் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனக்கு ஆக்ஷன் கதைகளில் நடிக்க ஆர்வமாக உள்ளது என்றார்.

படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பிய நேரத்தில் தமன்னாவுக்கு ஆக்ஷன் பட வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்