ஆப்நகரம்

மாஸ்டர் ஷெஃப் தயாரிப்பாளர் மீது கேஸ் போடும் தமன்னா

மாஸ்ட் ஷெஃப் தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து தயாரிப்பு நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவிருக்கிறார் தமன்னா.

Samayam Tamil 24 Oct 2021, 2:31 pm
மாஸ்டர் ஷெஃப் தெலுங்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு தொடரவிருக்கிறார் தமன்னா.
Samayam Tamil tamannaah to sue master chef telugu producer
மாஸ்டர் ஷெஃப் தயாரிப்பாளர் மீது கேஸ் போடும் தமன்னா


மாஸ்டர் ஷெஃப்

மாஸ்டர் ஷெஃப் தமிழ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இது போன்று மாஸ்டர் ஷெஃப் தெலுங்கு நிகழ்ச்சியை தமன்னா தொகுத்து வழங்கினார். விஜய் சேதுபதியும், தமன்னாவும் சேர்ந்து போட்டோஷூட்டில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சிக்கு தமன்னா அணிந்து வந்த உடைகளை பார்க்கவே பலர் டிவி முன்பு வந்து அமர்ந்தார்கள்.

தமன்னா

தமன்னாவை பார்க்கவே தமிழ் ரசிகர்களும் மாஸ்டர் ஷெஃப் தெலுங்கு நிகழ்ச்சியை பார்த்தனர். இனி என் தேசம் ஆந்திரா, என் தாய் மொழி தெலுங்கு என்று சில தமிழ் ரசிகர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மாஸ்டர் ஷெஃப் தெலுங்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், தமன்னாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

சம்பளம்

மாஸ்டர் ஷெஃப் தெலுங்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறார் தமன்னா. இது குறித்து அவரின் வழக்கறிஞர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மாஸ்டர் ஷெஃப் தெலுங்கு நிகழ்ச்சிக்கான சம்பள பாக்கி இருப்பதாலும், இன்னவேட்டிவ் ஃபிலிம் அகடாமியின் நடவடிக்கையாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார் தமன்னா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

தொடர்ந்து சம்பளம் கொடுக்காத போதிலும், ப்ரொஃபஷனலாக அவர்கள் நடக்காத போதிலும், தமன்னா தன் பிற கமிட்மென்ட்டுகளை விட்டுவிட்டு மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சியை முடித்துக் கொடுக்க நினைத்தார். ஆனால் தயாரிப்பு நிறுவனமோ திடீர் என்று தொடர்பை நிறுத்திக் கொண்டது. அதனால் வேறு வழியில்லாமல் வழக்கு தொடரவிருக்கிறார் தமன்னா என்று அவரின் வழக்கறிஞர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்