ஆப்நகரம்

சிரஞ்சீவி படத்தில் நடித்த பிறகு தமன்னா எடுத்த திடீர் முடிவு..!!

இனி படங்களில் நடிக்கும் போது கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கப்போவதாக தமன்னா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Dec 2018, 7:33 pm
தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் தீவிரமாக நடித்து வரும் நடிகை தமன்னா, கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் தெளிவாக இருக்கப்போவதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன்- தமன்னா


நடிகை தமன்னா, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். தற்போது இவர் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கைப் பற்றி ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் என்னை இன்னொரு நடிகையுடன் ஒப்பிடக்கூடாது. நான் நானாகத்தான் இருக்க விரும்புகிறேன். என்னைப் போல் வரவேண்டும் என்று வேறு நடிகைகள் நினைப்பதும் தவறு தான்.

ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் உள்ளன. அதை வெளிப்படுத்த வேண்டும். எனது பலமும் பலவீனமும் தெரியும். தொழிலில் முழு கவனத்தையும் செலுத்தினால் போதும். பெயர், புகழ், வெற்றிகள் தானாக வந்து சேரும்.

சமீபத்தில் நான் வயதுக்கு மீறிய படங்களில்தான் நடித்து இருக்கிறேன். இனிமேல் அதுமாதிரி படங்களில் நடிக்கமாட்டேன். அழ வைக்கிற கதாபாத்திரங்களில் நடிக்க பிடிக்காது. ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் படங்களில் நடிக்கவே ஆர்வம் இருக்கிறது என்றார் தமன்னா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்