ஆப்நகரம்

தேசிய விருதுக்கு எதிராக குரல் உயர்த்திய தமிழ் கலைஞர்கள்!

இன்று நடைபெற்ற ஐங்கரன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ் சினிமா கலைஞர்கள் தங்கள் குரலை அழுத்தமாக பதிவு செய்தனர்.

Samayam Tamil 14 Aug 2019, 1:05 pm
இயக்குநர் ரவியரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஐங்கரன். இப்படத்தின் இசைவெளியீட்டுவிழா இன்று ஒரு தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் பாரதிராஜா, ஆடுகளம் நரேன், வசந்தபாலன், சுரேஷ் கமாட்சி, அருள் தாஸ் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் தமிழ் சினிமா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், 96, வடசென்னை முதலான அருமையான படங்கள் கடந்த வருடத்தில் வந்திருந்தாலும் தேசிய விருது பட்டியலில் இடம்பெறவில்லை. இதனை இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் தேசிய விருது புறக்கணிக்கப்பட்டது பற்றி தங்கள் குரலை பதிவு செய்தார்கள்.
Samayam Tamil Vasantha Balan


Also Read: 400 கலைஞர்களுக்கு தங்க மோதிரம் அன்புப் பரிசாக வழங்கிய தளபதி!

இயக்குநர் வசந்தபாலன் கூறுகையில்....தமிழகம் கலைகளின் தாயகம். தேசிய விருதுகளில் தமிழ் சினிமா புறக்கணிக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டம். பாரதிராஜா சார் தான் தமிழ் தயாரிப்பாளர் சங்கத் தலைமை பதவிக்கு வரவிருக்கிறார். இங்கே அவரிடம் ஒரு கோரிக்கை. தேசிய விருது ஜூரிக் குழுவுக்கு நாம் ஆட்களை தேர்ந்தெடுத்து நம் சார்பில் கலந்து கொள்ள அனுப்பி வைக்க முடியுமா என முயல வேண்டும். ஜூரிக்கள் தான் விருதை தீர்மானிக்கிறார்கள் என்பதால் நம் சார்பில் தகுதியானவரை அனுப்பி வைப்பது நம் கடமை.

Also Read: தல அரசியலுக்கு வருவாரா? அர்ச்சனாவின் கேள்விகளுக்கு அஜித் போலவே பதிலளிக்கும் ரங்கராஜ் பாண்டே!


நான் எம் பிக்கள் தமிழரசி தங்கப்பாண்டியன், சு. வெங்கடேசன் ஆகியோருடன் இது சம்பந்தமாக பேசினேன். அவர்கள் உதவ தயாராக உள்ளார்கள். இதை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். சுரேஷ் கமாட்சி கூறுகையில், தமிழ் சினிமா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது அதிர்ச்சியானது. 96, மேற்கு தொடர்ச்சி மலை, போன்ற தகுதி படைத்த படங்கள் தேர்வு பெறாதது வருத்தம் நாம் அனைவரும் இணைந்து நம் குரலை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

Also Read: Dhanush: அக்ஷய் குமார் ரீமேக் படத்தில் தனுஷ் நடிக்க வேண்டும்: அருணாச்சலம் முருகானந்தம்!!

நடிகர் அருள்தாஸ் கூறுகையில், இது அநியாயமான செயல். இதற்கு எதிராக சினிமாவில் அனைவரும் பேச வேண்டும். இதை இப்படியே விடக்கூடாது. ஏன் நமக்கு தகுதி இருந்தும் கிடைக்கவில்லை எனத் தெரியவில்லை. இதற்கான தீர்வை முன்னெடுங்கள் எனப் பேசினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்