ஆப்நகரம்

பிக்பாஸில் சர்ச்சை : கட்டிப்பிடிக்க ஆளில்லாமல் ஏங்கும் ஜல்லிக்கட்டு ஜூலி: இளம் நடிகரிடம் புலம்பல்

பிக்பாஸில் சர்ச்சை : கட்டிப்பிடிக்க ஆளில்லாமல் ஏங்கும் ஜல்லிக்கட்டு ஜூலி: இளம் நடிகரிடம் புலம்பல்

TNN 27 Jun 2017, 2:54 pm
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது . இதில் தமிழச்சி என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது புகழ் பெற்ற ஜூலியானா பங்கேற்றுள்ளார்.
Samayam Tamil tamil bigg boss julie controversial talk
பிக்பாஸில் சர்ச்சை : கட்டிப்பிடிக்க ஆளில்லாமல் ஏங்கும் ஜல்லிக்கட்டு ஜூலி: இளம் நடிகரிடம் புலம்பல்



தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இடம்பெற்றுள்ள பிக் பாஸ் நிகழச்சியில் அந்த துறையை சாராத ஒரு நபர் இடம் பெற்றுள்ளார் என்றால் அது ஜூலியானா தான்.இந்தநிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோட் நேற்று ஒளிபரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டில் பிரபலமடைந்த பெண் ஜூலி, இளம் நடிகர் ஸ்ரீயிடம் தனியாக பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றது.

இந்த காட்சியில் சோகத்தில் இருக்கும் இளம் நடிகர் ஸ்ரீயிடம் , ஜூலி ," ஒவ்வொருத்தரும், கட்டிப்புடிக்குறாங்க, எனக்கு யாருமே இல்லை என் நிலைமய கொஞ்சம் யோசிச்சுப்பாரு. என்னை விட்டு போய்விடாதே" என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் ஜுலியின் இந்த நடவடிக்கை குறித்து இணையத்தில் ஏதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்