ஆப்நகரம்

'ஜெய் பீம்' பட விவகாரம்: சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கும் திரையுலகினர்!

'ஜெய் பீம்' படம் தொடர்பான சர்ச்சைகளில் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக திரையுலகை சார்ந்த பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

Samayam Tamil 17 Nov 2021, 2:19 pm
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்தை சுற்றி நடக்கும் சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழ் சினிமாவில் பெரும் புகைச்சலை கிளப்பியுள்ள இந்த விவகாரத்தில் திரையுலக பிரபலங்கள் ஒவ்வொருவராக சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
Samayam Tamil Suriya
Suriya


இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், எதற்கும் துணிந்தவன் சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார். டைரக்டர் ஞானவேல் உள்ளிட்ட அத்தனை 'ஜெய் பீம்' திரைக்கலைஞர்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். நிறைய பேர் பாராட்டிவிட்டார்கள். இப்போது என்னுடைய பாராட்டுகளையும், நன்றிகளையும் சில பேருக்குத் தெரிவிப்பதற்காக இந்தப் பதிவு. சூர்யா உள்ளிட்ட, குறிப்பாக சூர்யாவுக்கு வந்த பிரச்சனைகளுக்கு ஆதரவாக கலை உலகத்தைச் சார்ந்தவர்கள் குரல் கொடுக்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபையிலிருந்து எங்கள் இயக்குநர், இயக்குநர் இமயம் பாரதிராஜா குரல் கொடுத்திருக்கிறார். இயக்குநர் பாரதிராஜா அவர்கள் முன்மொழிந்ததை, நான் அப்படியே வழிமொழிகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதே போல் நடிகர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலை வியாபாரமாக்குவதும் வியாபாரத்தை அரசியலாக்குவதும் இந்த ஒரு நிகழ்வோடு நிறுத்தி விடுவீராக! யாரும் தனிமனிதரல்ல இந்த தரணியிலே, அப்படி தனித்தனியா குரல் கொடுப்பதினாலேயே இன்று நாம் தனித்தனி தீவுகளாக மிதந்து கொண்டிருக்கிறோம். ஒன்றுகூடி தீர்க்க வேண்டியவைகளின் பட்டியல் நீண்டு கிடக்கிறது. கூட்டாக உருவாக்கப்படும் திரைப்பட ஊடகத்தில் தனியொரு நபரின் கருத்துக்களாக வெளிவருவதில்லை. சமயத்தில் சொந்தக் கருத்துக்களையும் ஒதுக்கி வைத்து படம் சொல்கின்ற கருத்தினை சொல்ல வேண்டியிருக்கிறது.

'கைதி 2' படம் என்னாச்சு..?: சீக்ரெட்டை உடைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!
நம் வரலாற்றில் சோகமும் வலியுமாய் அடங்கி கிடக்கிறது. ஒவ்வொரு கலைக்கும் ஊடகத்திற்கும் அதனதற்கான சமுதாயப் பொறுப்புகள் இருக்க செய்கின்றன. தம்பி சூர்யா அவருக்குக் கொடுத்த பொறுப்பினை செவ்வனே செய்யத்தான் முற்பட்டிருக்கிறார். வேறு உட்காரணங்கள் இருப்பதாக வர்ணம் பூசி, போதுமான அளவிற்கு அறுத்து ஆயப்பட்டு விட்டது. சிலர் மனம் புண்பட்ட அந்த பிம்பம்கள் படத்தினின்று எடுத்தெறியப்பட்டு விட்டதாகவும் அறிகிறேன்.


இந்தச்சூழலில் இதற்கான, விலை பேச முற்படுவது வேதனை. எதிர்காலம் குறித்த கவலையையும், அச்சத்தையும் கொண்டு சேர்க்கிறது. சம்பந்தபட்டவர்கள் இத்தோடு இதனை முடிவுக்கு கொண்டு வருவது பொது சமூகத்திற்கு நன்று. மேற் சொன்னதுபோல் ஒன்றுகூடி ஆற்ற வேண்டிய கடமைகளும், எடுக்கப்பட வேண்டிய தீர்வுகளும் எண்ணிலடங்கா சிதறிக்கிடக்கின்றன. வன்மமின்றி அன்பால் அதைப் பொறுக்கிச்சேர்ப்போம், புதியதோர் உலகஞ்செய்வோம். நன்றி! என தெரிவித்துள்ளார்.


இதே போல் இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதியை நிலைநாட்ட வற்புறுத்தும் திரைப்படைப்புகளையும், அதை மிகுந்த சிரமத்துடன் உருவாக்கும் படைப்பாளிகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல ஒரு நல்ல சமூகத்தின் கடமையும் கூட. அந்த வகையில் “ஜெய்பீம்” படக்குழுவினருடன் எப்போதும் நான் என தெரிவித்துள்ளார்.


இதே போல், இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், பா.ரஞ்சித், கோபி நயினார், நவீன், லோகேஷ் கனகராஜ், சிம்பு தேவன், ராஜீவ் மேனன் உள்ளிட்டவர்களும், 'ஜெய் பீம்' விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்