ஆப்நகரம்

சூரிக்கு அப்பாவாக நடித்த துணை நடிகர் கார் விபத்தில் படுகாயம், போட்டோகிராஃபர் பலி!

சினிமா புகைப்பட கலைஞரும், துணை நடிகரும் காரில் திண்டுக்கல்லில் இருந்து தேனிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கார் விபத்தில் புகைப்பட கலைஞர் பரிதாபமாக பலியாகியுள்ளார். துணை நடிகர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Samayam Tamil 4 Sep 2019, 7:38 am
தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மீசை தவசி. இவரது மீசையைப் பார்த்து கட்டப் பஞ்சாயத்து பேசுவதற்கு அழைத்த நடிகர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர் என்றே கூறலாம். ஆம், ரஜினி முருகன் படத்தில், மீசை தவசியை தங்களுக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேசுவதற்கு அழைத்து சென்று பஞ்சாயத்து பேசியுள்ளனர். மேலும், சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், சூரிக்கு அப்பாவாக நடித்துள்ளார். அந்தப் படத்தில், கருப்பன்… குசும்புக்காரன்…என்று வரும் டயலாக்கை பேசி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.
Samayam Tamil Stills Shiva


இந்த நிலையில், அவள் வருவாளா படத்தை இயக்கிய ராஜ்கபூர், ஊர் மரியாதை என்ற சீரியலை இயக்கி வருகின்றார். இதற்கான படப்பிடிப்பு தேனி அருகிலுள்ள கோம்பை என்ற பகுதியில் உள்ள ஒரு கோயிலில் நடந்து வருகிறது. இதற்கான படப்பிடிப்பில், புகைப்பட கலைஞர் ஸ்டில்ஸ் சிவா மற்றும் துணை நடிகர் மீசை தவசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

H Vinoth: தல பட வில்லன் யார்? இயக்குநர் கூறிய தகவல்!

பொன்னியின் செல்வனில் இணைந்த தமிழின் முன்னணி நடிகை!

சயின்ஸ் பிக்ஷன் படத்தில் சந்தானம், அதுவும் மூன்று கெட்டப்பில்?

படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் ஒரு காரிலும், சிவா, தவசி இருவரும் ஒரு காரிலும் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கோம்பை அருலுள்ள உத்தமபாளையம் நோக்கி தவசி, சிவா சென்ற கார் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருவரும் பலத்த காயத்துடன் அருகிலுள்ள உத்தமபாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி ஸ்டில்ஸ் சிவா உயிரிழந்துள்ளார். தவசி மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்