ஆப்நகரம்

விஸ்வாசம் பட பாடலாசிரியர் எழுதிய கொரோனா பாடல் !

கொரோனா பற்றிய விழிப்புணர்வு பாடல் ஒன்று வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Samayam Tamil 23 Mar 2020, 3:03 pm
உலகம் முழுவதும் கொரோனா மக்களை கடுமையாக முடக்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் படிப்படியே அதிகரித்து வரும் நிலையில், அரசும், தனியார் நிறுவனங்களும், பொதுமக்களும் சேர்ந்து பாதுகாப்பை உறுதிபடுத்தும் நோக்கில் பல விசயங்களை செய்து வருகின்றன. அப்பாவி மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை அரசும், தன்னார்வ நிறுவனங்களும் செய்து வருகின்றன.
Samayam Tamil corona virus


கலை உலகத்தைச் சார்ந்தவர்களும் வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பாடல் ஒன்று வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமா உலகத்தின் இரு கலைஞர்கள் இணைந்து இந்த பாடலை உருவாக்கியுள்ளனர். இந்த பாடலின் வரிகளை எளியவர்களுக்கு புரியும் விதத்தில் ஆஸ்மின் எழுதியுள்ளார். இவர் விஜய் ஆண்டனியின் தப்பெல்லாம் தப்பே இல்லை பாடலையும், அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் தூக்கு துரை பாடலையும் எழுதியவர்.

புறம்போக்கு என்கிற பொதுவுடமை எனும் படத்தின் இசையமைப்பாளரும், உலகப் புகழ் பெற்ற இசைச் சிறுவன், லிடியன் நாதஸ்வரத்தின் தந்தையுமாகிய வர்ஷன் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

நாளை நமக்கொரு காலம் வரும் என்று தொடங்கும் இந்த பாடல் மிகவும் சிறப்பாக இருக்கிறது என பலரும் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்