தமிழ் திரைப்பட இயக்குனர்கள் தொழிலாளர் நலத்துறை அமைச்ச ர் நிலோபர் கபிலை சந்தித்துப் பேசினர்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சரை, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து மனு கொடுத்தனர். திரைப்பட இயக்குனர்கள் சங்கம், உரிய காலத்தில், இ-பார்ம் பதிவு செய்யாததால், சங்கத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக, தொழிலாளர் நல ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அரசின் நினைவூட்டல் கடிதங்கள் அனைத்தும், சங்க அலுவலகத்தின் பழைய முகவரிக்கு சென்றதால், நிர்வாகிகளுக்கு, உரிய தகவல் கிடைக்கவில்லை. ரத்து செய்யப்பட்ட பின்னே, சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிந்தது. இதை முன்னதாக அறிந்த, கார்த்திகேயன் என்பவர், அதே பெயரில், ஒரு சங்கத்தை பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச் செயலர், ஆர்.கே.செல்வமணி மற்றும் இயக்குனர்கள், நேற்று, தலைமை செயலகம் வந்தனர்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், செயலர் அமுதா ஆகியோரை சந்தித்தனர். சங்க அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை, மறுபரிசீலனை செய்யும்படி, மனு கொடுத்தனர்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சரை, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து மனு கொடுத்தனர். திரைப்பட இயக்குனர்கள் சங்கம், உரிய காலத்தில், இ-பார்ம் பதிவு செய்யாததால், சங்கத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக, தொழிலாளர் நல ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அரசின் நினைவூட்டல் கடிதங்கள் அனைத்தும், சங்க அலுவலகத்தின் பழைய முகவரிக்கு சென்றதால், நிர்வாகிகளுக்கு, உரிய தகவல் கிடைக்கவில்லை. ரத்து செய்யப்பட்ட பின்னே, சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிந்தது. இதை முன்னதாக அறிந்த, கார்த்திகேயன் என்பவர், அதே பெயரில், ஒரு சங்கத்தை பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச் செயலர், ஆர்.கே.செல்வமணி மற்றும் இயக்குனர்கள், நேற்று, தலைமை செயலகம் வந்தனர்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், செயலர் அமுதா ஆகியோரை சந்தித்தனர். சங்க அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை, மறுபரிசீலனை செய்யும்படி, மனு கொடுத்தனர்.