ஆப்நகரம்

தமிழ் ரசிகர்களை புகழும் அனஸ்வரா!

கேரளாவிலிருந்து வரும் நடிகைளுக்கு தமிழ் ரசிகர்கள் ஆதரவு தருகிறார்கள் என்று நடிகை அனஸ்வரா கூறியுள்ளார்.

TOI Contributor 28 Nov 2016, 1:48 pm
கேரளாவிலிருந்து வரும் நடிகைளுக்கு தமிழ் ரசிகர்கள் ஆதரவு தருகிறார்கள் என்று நடிகை அனஸ்வரா கூறியுள்ளார்.
Samayam Tamil tamil fans are appreciating kerala actress anaswara
தமிழ் ரசிகர்களை புகழும் அனஸ்வரா!


தமிழில் ‘ஈகோ’, ‘வல்லினம்’, ‘யாமிருக்க பயமே’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை அனஸ்வரா. தற்போது ‘பட்டினப்பாக்கம்’ படத்தில் நடிகர் கலையரசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அனஸ்வரா, இரு படங்களில் கேரக்டர் ரோலில் நடித்து இருந்தார். தற்போது ‘பட்டினப்பாக்கம’ படத்தில் மீண்டும் தனி நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில். இந்தப் படத்தின் டீசரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். தற்போது படம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. நடிகர் கலையரசன் இந்த படத்தில் செய்யாத கொலைக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கும் வேடத்தில் நடித்துள்ளார். நாயகியாக நடித்துள்ள அனஸ்வரா, இந்த படம் தன்னை முன்னணி நடிகை அந்தஸ்துக்கு கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்.

அவர் கூறுகையில், ‘’நான் சென்னையில் பிறந்து வளர்ந்த பெண் என்றாலும், எனது பூர்வீகம் கேரளா. அதனால் கேரளத்து எல்லா நடிகைகளுக்கு ஆதரவு தெரிவித்துவரும் தமிழர் ரசிகர்கள் எனக்கும் அதே மாதிரி ஆதரவு தருவார்கள் என்று முழுமையாக நம்புகிறேன்’’ என்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்