தற்கொலைக்கு முயற்சித்த துணை நடிகர்
தமிழ் சினிமாவில் துணை நடிகராக சில படங்களில் நடித்துள்ள இளவரசன் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TNN 24 Aug 2016, 6:09 pm
சென்னை: தமிழ் சினிமாவில் துணை நடிகராக சில படங்களில் நடித்துள்ள இளவரசன் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளவரசன் என்கிற அரசு(29), 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'சிறுத்தை', 'சகுனி' உள்ளிட்டப் படங்களில் துணை நடிகராக நடித்தவர். இவர் நடித்த சில படங்களுக்கு தயாரிப்பாளர்கள் ஊதியம் தராத காரணத்தால் குடும்பம் நடத்த அவதிப்படுவதாக தனது தற்கொலை குறிப்பில் எழுதியுள்ளார்.
நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான விஷாலுக்கு இளவரசன் எழுதியுள்ள தற்கொலைக் குறிப்பில், பல முறை தனது பிரச்னைகளை விஷாலுக்கு தெரிவிக்க முயற்சித்ததாகவும், தன்னை போன்று குடும்பம் நடத்தவே கஷ்டப்படும் துணை நடிகர்களுக்கு விஷால் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
எம்.கே.பி நகரில் மனைவி சசிகலா, மகன் சிவாவுடன் வசித்து வந்த இளவரசன், தயாரிப்பாளர்களிடம் இருந்து சம்பளத்தை வாங்க முடியாத தோல்வியை சுட்டிக்காட்டி அவரது மனைவி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
அப்படி ஒருநாள் சண்டையிட்டு விலகிச் சென்ற ஆசை மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதை தாங்கிக் கொள்ள முடியாமல் இளவரசன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது பக்கத்துவீட்டைச் சேர்ந்த நண்பர் ஓடி வந்து இளவரசனை ஸ்டேன்லி மருத்துவமனையில் அனுமதித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இளவரசன் என்கிற அரசு(29), 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'சிறுத்தை', 'சகுனி' உள்ளிட்டப் படங்களில் துணை நடிகராக நடித்தவர். இவர் நடித்த சில படங்களுக்கு தயாரிப்பாளர்கள் ஊதியம் தராத காரணத்தால் குடும்பம் நடத்த அவதிப்படுவதாக தனது தற்கொலை குறிப்பில் எழுதியுள்ளார்.
நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான விஷாலுக்கு இளவரசன் எழுதியுள்ள தற்கொலைக் குறிப்பில், பல முறை தனது பிரச்னைகளை விஷாலுக்கு தெரிவிக்க முயற்சித்ததாகவும், தன்னை போன்று குடும்பம் நடத்தவே கஷ்டப்படும் துணை நடிகர்களுக்கு விஷால் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
எம்.கே.பி நகரில் மனைவி சசிகலா, மகன் சிவாவுடன் வசித்து வந்த இளவரசன், தயாரிப்பாளர்களிடம் இருந்து சம்பளத்தை வாங்க முடியாத தோல்வியை சுட்டிக்காட்டி அவரது மனைவி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
அப்படி ஒருநாள் சண்டையிட்டு விலகிச் சென்ற ஆசை மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதை தாங்கிக் கொள்ள முடியாமல் இளவரசன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது பக்கத்துவீட்டைச் சேர்ந்த நண்பர் ஓடி வந்து இளவரசனை ஸ்டேன்லி மருத்துவமனையில் அனுமதித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.