ஆப்நகரம்

மலரும் நினைவுகளோடு ஒன்று கூடிய திரை பிரபலங்கள்

தமிழ் சினிமாவை 80-களில் ஆட்சிசெய்த நட்சத்திரங்கள் அனைவரும் சந்தித்துக் கொண்டனர்.

Samayam Tamil 14 Nov 2018, 11:51 pm
தமிழ் சினிமாவில் 80-களில் கொடிகட்டி பறந்த நடிகர், நடிகையர்கள் பலர் ஒன்றுகூடி சந்தித்துக் கொண்ட நிகழ்வு தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நடந்துள்ளது.
Samayam Tamil celebrities
தமிழ் சினிமாவை கலக்கிய நடிகர்களின் கெட்-டுகெதர்


1975-ல் திரைத்துறைக்குள் நுழைந்து 1980-களில் முன்னணி இடம் வகித்த நடிகர்கள் அனைவரும் ’கிளாஸ் ஆஃப் 80’ஸ்’ என்கிற குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். பெரும்பாலும் தமிழ் திரைத்துறையை சார்ந்தவர்கள் இருந்தாலும் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைத்துறையை சார்ந்த சில நடிகர்களும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஆண்டுதோறும், கிளாஸ் ஆஃப் 80’ஸில் இருக்கும் உறுப்பினர்களாக உள்ள நடிகர்கள் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கே சந்தித்துக் கொள்வது வழக்கம். அந்தவகையில் இந்த குழுவினரின் சந்திப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும், சீனாவிலும் நடந்துள்ளது.

அந்தவகையில், கிளாஸ் ஆஃப் 80’ஸ் குழுவினரின் 8வது முறையாக நடந்துள்ளது. இந்த சந்திப்பில், பாலிவுட் நடிகர் ஜேக்கி ஷெராஃப், மோகன்லால், சரத்குமார்,அர்ஜுன், ஜெயராம், சுரேஷ், சத்யராஜ், ராதா, குஷ்பு, சுஹாசினி, பாக்யராஜ், மேனகா, நதியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, கிளாஸ் ஆஃப் 80’ஸ் குழுவினரின் சந்திப்பு 9வது முறையாக நடந்துள்ளது. நண்பர்களை சந்தித்தது ம்கிழ்ச்சி என்று குறிபிட்டு, சந்திப்பில் பங்கேற்ற நடிகர், நடிகையர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கெட் டுகதர் எனப்படும் இது போன்ற சந்திப்புகள் பழைய நினைவுகளை, சந்தித்த ஏற்ற இரக்கங்களைப் பகிர்ந்துகொள்ள சிறப்பான தருணமாக அவர்களுக்கு அமைந்திருக்கும். இந்த தகவலை தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, “இது எங்களின் 9-வது வருட ஒன்று கூடல்” என மலரும் நினைவுகளோடு பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்