ஆப்நகரம்

அதெல்லாம் முடியாது: அடம் பிடித்த வடிவேலுக்கு ஆப்பு வச்ச இயக்குனர் ஷங்கர்!

இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிப்பதற்கு எனக்கு ரூ.1 கோடி கொடுத்தால் படத்தில் நடிப்பேன் என்று அடம் பிடித்த வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒரு வார காலம் அவகாசம் கொடுத்துள்ளது.

Samayam Tamil 25 May 2018, 4:34 pm
இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிப்பதற்கு எனக்கு ரூ.1 கோடி கொடுத்தால் படத்தில் நடிப்பேன் என்று அடம் பிடித்த வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒரு வார காலம் அவகாசம் கொடுத்துள்ளது.
Samayam Tamil vadi


இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பி கடந்த 2006ம் ஆண்டு வெளியான காமெடி ஹிட் படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. தற்போது இப்படத்தின் 2ம் பாகமான இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியானது. இப்படத்திற்குப் பிறகு சிம்பு தேவனுக்கும் – வடிவேலுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட படம் நின்று போனது. மேலும், வடிவேலு படத்தை விட்டும் வெளியேறினார். இப்பிரச்சனையைத் தொடர்ந்து வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. வடிவேலு உடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.

படத்தில் நடிப்பதற்கு தனக்கு மேலும், ரூ.1 கோடி கொடுத்தால் தான் நடிப்பேன் என்றும் கூறியுள்ளாராம். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர், வடிவேலு படத்தை விட்டு விலகியதால், தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், வடிவேலு தனக்கு ரூ.9 கோடி கொடுக்க வேண்டும் இல்லையென்றால், எந்தவித நிபந்தனையும் இல்லாமல் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஷங்கர் கூறியுள்ளார். தொடர்ந்து வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒரு வார கால அவகாசம் அளித்துள்ளதாம். மேலும், ஷங்கருக்கு ரூ.9 கோடி வழங்க வேண்டும் இல்லையென்றால், எந்த நிபந்தனையும் விதிக்காமல் படத்தில் நடிக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை செய்யத் தவறினால், வடிவேலுக்கு ரெட்கார்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ரெட்கார்டு போட்டால், அந்தப் பிரச்சனை தீரும் வரை அவர் எந்தப் படத்திலும் நடிக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்