ஆப்நகரம்

செக் மோசடி வழக்கு: 'தங்கமீன்கள்' பட தயாரிப்பாளருக்கு சம்மன்

'தங்கமீன்கள்','குற்றம்கடிதல்' போன்ற தமிழ் திரைப்படங்களை தயாரித்த 'ஜே.எஸ்.கே ஃபிலிம்ஸ்' நிறுவனர் சதீஷ்குமாருக்கு செக் மோசடி வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

TNN 1 Apr 2016, 4:11 pm
சென்னை: 'தங்கமீன்கள்','குற்றம்கடிதல்' போன்ற தமிழ் திரைப்படங்களை தயாரித்த 'ஜே.எஸ்.கே ஃபிலிம்ஸ்' நிறுவனர் சதீஷ்குமாருக்கு செக் மோசடி வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Samayam Tamil tamil film producer sathishkumar summoned in cheque bouncing case
செக் மோசடி வழக்கு: 'தங்கமீன்கள்' பட தயாரிப்பாளருக்கு சம்மன்


சினிமா பைனான்சியர் போத்ராவிடம் தயாரிப்பாளர் சதீஷ்குமார் ரூ.74 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில் கடனை திருப்பி செலுத்த தயாரிப்பாளர் சதீஷ்குமார் வழங்கிய காசோலை வங்கியில் பணமின்றி திரும்பியது.

இதனையடுத்து போத்ரா சதீஷ்குமார் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் வரும் 26ஆம் தேதி நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்