ஆப்நகரம்

தயாரிப்பாளர் திருப்பூர் மணி மரணம்!

தமிழ் திரையுலகின் பழம்பெரும் தயாரிப்பாளரான திருப்பூர் மணி சென்னையில் காலமானார்.

TOI Contributor 10 Sep 2016, 1:53 pm
தமிழ் திரையுலகின் பழம்பெரும் தயாரிப்பாளரான திருப்பூர் மணி சென்னையில் காலமானார்.
Samayam Tamil tamil film producer tiruppu mani passed away
தயாரிப்பாளர் திருப்பூர் மணி மரணம்!


திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவரான மணி, பின்னாளில் திருப்பூர் மணி என அழைக்கப்பட்டார். இவர், விவேகானந்தா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ஏராளமான தமிழ், மலையாளப் படங்களை தயாரித்தும், இயக்கியும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக, நடிகர் சத்யராஜூ, சில்க் ஸ்மிதா போன்றோருக்கு சினிமா வாய்ப்பு வழங்கி, அறிமுகம் செய்தவர் இவரே.

மலையாளம், தமிழில் 50க்கும் அதிகமான படங்களை தயாரித்துள்ள மணி, 10க்கும் அதிகமான படங்களை இயக்கியும் உள்ளார். சிறந்த இயக்கத்திற்காக, 2 முறை தேசிய விருது வென்றுள்ளார்.

தமிழில், காசி, ஈட்டி, இமைகள், ஆயிரம் முத்தங்கள், ஆணிவேர், வண்டிச்சக்கரம், அரங்கேற்ற வேளை, உன்னுடன், காசி போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த படங்களாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்