ஆப்நகரம்

திரைப்படத் துறையை காப்பாற்ற அரசு தவறுகிறது- ஆர்.கே. செல்வமணி சாடல்

திரைத்துறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நிலையில், அதை காப்பாற்ற வேண்டிய அரசு களவாணித்தனம் செய்கிறது என திரைப்பட இயக்குநர் செல்வமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 27 Apr 2019, 11:27 pm
சென்னையில் ஐஆர்8 திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்படக் குழுவினருடன், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட சில சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Samayam Tamil தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நல்ல தலைமை தேவை- ஆர்.கே. செல்வமணி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நல்ல தலைமை தேவை- ஆர்.கே. செல்வமணி


மேடையில் பேசிய ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகத்தை அரசே ஏற்றது தொடர்பாக சில கருத்துக்களை முன்வைத்து பேசினார். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திரைத்துறையின் மூலமாக வருடத்திற்கு ரூ. 4000 கோடி வரை லாபம் ஈட்டுகிறது.

ஆனால் இதை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. விவசாயத்தை போலவே சினிமாவும் அழிவை நோக்கி செல்கிறது.

மேலும், விவசாயத்தை காப்பாற்ற விவசாயிக்கு கடனோ, மானியமோ தேவையில்லை. அவர்கள் உற்பத்தி செய்யும் தொழில்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமையை தந்தால் மட்டும் போதும். விவசாயம் பிழைத்துக் கொள்ளும் என்று செல்வமணி தெரிவித்தார்

அப்போது அவரிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், தற்போதைய தலைமை சிறப்பாக இருந்தாலும், செயல்பாடுகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டியது இருக்கிறது. இன்னும் ஒரு நல்ல தலைமை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேவைப்படுகிறது என்று கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்