ஆப்நகரம்

​சர்வதேச திரைப்பட விழாவில் சாதனைப் படைத்த தமிழ்ப் படங்கள்!

சென்னையில் நடைபெற்ற சர்வதேசப் படவிழாவில் கலந்து கொண்ட தமிழ் படங்களுக்குவிருது கிடைத்துள்ளது

TNN 23 Dec 2017, 7:31 pm
சென்னையில் நடைபெற்ற சர்வதேசப் படவிழாவில் கலந்து கொண்ட தமிழ் படங்களுக்கு
Samayam Tamil tamil movie bagging lots of awards in international film festival
​சர்வதேச திரைப்பட விழாவில் சாதனைப் படைத்த தமிழ்ப் படங்கள்!

விருது கிடைத்துள்ளது.

சென்னையில் 15வது சர்வதேச திரைப்பட விழா சமீபத்தில் ஆரம்பமாகி நேற்றுடன்
முடிந்தது. இந்த விழாவில் விதார்த் நாயகனாக நடித்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ சிறந்த
படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விழாவில் மாநகரம், 8 தோட்டாக்கள், அறம், கடுகு, குரங்கு பொம்மை, மகளிர் மட்டும், மனுசங்கடா, ஒரு கிடாயின் கருணை மனு, ஒரு குப்பை கதை, தரமணி, துப்பறிவாளன், விக்ரம் வேதா, இப்படை வெல்லும் ஆகிய 13 தமிழ்ப்படங்கள் திரையிடப்பட்டன.

சிறந்த தமிழ்ப் படத்துக்கான போட்டியில் விதார்த் நாயகனாக நடித்த ‘ஒரு கிடாயின் கருணை
மனு’ தேர்வாகி வெற்றியடைந்துள்ளது. ஆட்டை மையமாகக் கொண்டு உருவான படம் “ஒரு
கிடாயின் கருணை மனு’.

ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இப்படத்தில், விதார்த், ரவீனா, ஜார்ஜ், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் உள்ளிட்டோர் நடித்தார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சுரேஷ் சங்கையா. 2-வது இடத்தை ‘விக்ரம் வேதா’ படம் பெற்றது. தேர்வுக்குழுவினரின் சிறப்பு விருது ‘மாநகரம்’ படத்துக்குக் கிடைத்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்