ஆப்நகரம்

ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை நடிகர் விஜய் முழுமையாக செலுத்திவிட்டார் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 17 Sep 2021, 9:11 am
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அவரின் இந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கில் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். இந்நிலையில் இந்த விவகாரத்தில் காருக்கான நுழைவு வரியை நடிகர் விஜய் செலுத்திவிட்டதாக தமிழக அரசு சார்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Vijay
Vijay


நடிகர் விஜய் கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை வாங்கினார். இந்தக் காருக்கு நுழைவுவரி செலுத்தாத காரணத்தால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அந்தக் கார் பதிவுசெய்யப்படவில்லை. அதையடுத்து விஜய் வாங்கிய அந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே அதை வாகன போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என வணிகவரித் துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்தும், நுழைவு வரி வசூலிக்கத் தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நடிகர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தவிட்டார் தனி நீதிபதி. அதனை தொடர்ந்து இந்த தீர்ப்பை எதிர்த்தும், தன்மீதான விமர்சனத்தை நீக்கும்மாறும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் விஜய்.

வடிவேலுவின் ரசிகராக சதீஷின் 'நாய் சேகர்' பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நடிகர் விஜய் 1 லட்சம் அபராதம் விதிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் ஏற்கனவே செலுத்திய நுழைவு வரி 20 சதவீதம் போக, எஞ்சியுள்ள 80 சதவீதத்தை விஜய் செலுத்த வேண்டும்’ என்றும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான மீதமுள்ள 80 சதவீத வரியை விஜய் செலுத்திவிட்டார்’ என்று தெரிவித்தார். இதை ஏற்று கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்