ஆப்நகரம்

TN Police Trolled: அஜித்தின் கார் கதவை திறந்த போலீஸ்... வலைதளங்களில் கிண்டல்

தமிழகம் முழுவதும் இன்று மக்களவைத் தேர்தல் நடந்தது. அதில் சில தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து வருகின்றன.

Samayam Tamil 18 Apr 2019, 6:49 pm
தமிழகம் முழுவதும் இன்று மக்களவைத் தேர்தல் நடந்தது. அதில் சில தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து வருகின்றன.
Samayam Tamil Ajith salini


இந்த தேர்தலில் காலை முதலே பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் என மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

காலையிலேயே திரை பிரபலங்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விஜய் ஆண்டனி என பலர் வாக்களித்துவிட்டு சென்றனர்.
சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறப்பட்ட நிலையில், சில மணி நேரத்திற்கு பின்னர் அவரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார். ஆனால் ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.

வைரலாகும் வீடியோ:
தல அஜித் மற்றும் அவரது மனைவி சாலினி காலையில் திருவான்மியூர் பீச் ரோட்டில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் வாக்களித்தனர்.

அவர்கள் அவந்த காரின் கதவை போலீஸார் திறந்து விட்டு அவர்களை வக்குச்சாவடியினுள் அழைத்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதில் சிலர் அவர், “ஒரு நடிகரின் மனைவிக்கு கார் கதவை திறந்துவிடும் காவல்துறை எப்படி நாட்டை காப்பாற்றும்….?

அவர் என்ன அரசியல் தலைவரா? அவர் கார் கதவை திறந்து வரமாட்டாரா. அவருக்கு பாதுகாப்பு தானே கொடுக்க சொன்னார்கள், கார் கதவை திறந்துவிடவா சொன்னார்கள்” என பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அஜித் வந்ததை அறிந்த அவரது ரசிகர்கள், அவரை காண அவரின் கார் முன் கூடினர். அதோடு அவர் குறித்து கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து போலீஸார் அஜித் மற்றும் சாலினியை நேராக வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்றனர்.

முந்தைய தேர்தலின் போது பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.






அடுத்த செய்தி

டிரெண்டிங்